செய்திகள் :

``ஈரானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" - ஈரான் போர் நிறுத்தம் குறித்து எம்.பி சஞ்சய் ராவத்

post image

அணுஆயுதம் தயாரிப்பதாக ஈரான் மீது குற்றம்சாட்டிய இஸ்ரேல் அதை தடுக்கப்போவதாக ஈரான் மீது போர் தொடுத்தது. இஸ்ரேலின் பின்னணியில் அமெரிக்கா இருக்கிறது எனத் தெரிந்தும் இஸ்ரேலுக்கு உடனடியாக பதில் தாக்குதல் கொடுத்தது ஈரான். அப்போதே அமெரிக்காவையும் எச்சரித்தது. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானின் அணு ஆயுதத் தளங்கள் எனக் குறிப்பிடப்படும் மூன்று இடங்களில் தாக்குதல் நடத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் முக்கிய சொத்து எனக் கருதப்படும் கத்தாரின் அமெரிக்கா இராணுவத் தளத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியது. அதனால் போர் மேகம் சூழ உலக நாடுகள் பரபரப்பானது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இனி அமெரிக்கா பதிலடி தராது என்றும், போர் நிறுத்தம் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட ஈரான், இஸ்ரேலுடனான போரை நிறுத்துவதாக அறிவித்தது. எந்த சூழலிலும் மிரட்டலுக்கு அடிபணியமாட்டோன் என உறுதியாக நின்றது ஈரான். இதைக் குறிப்பிடும் வகையில் சிவசேனா (UBT) எம்.பி சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ``ஒரு நாட்டின் சுயமரியாதையும், தைரியமும் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஈரான் காட்டியுள்ளது. காஷ்மீர், பாகிஸ்தான் பிரச்னை உள்ளிட்ட எந்த பிரச்சனையை இந்தியா எதிர்கொண்டபோதும் ஈரான் எப்போதும் இந்தியாவுடன் நின்ற நாடு. அந்த நாடு யாருக்கும் முன்பாக தலைவணங்கவில்லை. அதை ஈரானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"சமஸ்கிருத வெறி; தமிழை விட 22 மடங்கு அதிகம்; 'ரூ.2500 கோடி' ஒதுக்கிய பாஜக அரசு' - சு.வெ காட்டம்!

"பாஜக அரசு சமஸ்கிருதத்துக்கு 2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது. தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜக வுக்கு ஓட்டுக்... மேலும் பார்க்க

``இஸ்ரேல் ஈரான் போர் நிறுத்தம்; ஆனால் காஸா விவகாரத்தில் பிரதமர் மோடியின் மௌனம்..." - காங்கிரஸ்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து இருநாடுகளுக்கிடையே போர் அபாயம் ஏற்பட்டத... மேலும் பார்க்க

சீனாவில் முடங்கி கிடக்கும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் - தாமதமாகும் புல்லட் ரயில் திட்டம்?

மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் வரை புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஜப்பான் நாட்டின் தொழில் நுட்பம் மற்றும் நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட்டு வரும் இத்திட்டத்திற்கான பணிகள்... மேலும் பார்க்க

`முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட வழிகாட்டிகளை இழிவுபடுத்தியது கண்டனத்துக்குரியது'- டிடிவி தினகரன்

சேலத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முருக பக்தர்கள் மாநாட்டில் இந்து மக்கள் முன்னணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுத்தார்... மேலும் பார்க்க

ஈரானின் அணுசக்தி திட்டம்: அமெரிக்க இஸ்ரேலின் கவலைகளும், ஈரானின் பிடிவாதமும் | களம் 4: Iran vs Israel

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)மேனாள் ஆசிரியர் , பிபிசி உலகசேவைகட்டுரையாளர்:... மேலும் பார்க்க

Shashi Tharoor: மோடியைப் புகழ்ந்து கட்டுரை; "பாஜக-வில் இணைகிறேனா?" - சசி தரூர் விளக்கம்

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா அளித்த பதிலடி தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்கில் இந்தியா அரசு தூதுக்குழு ஒன்றை உலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் செய்திருக்கிறது.இந்தக் குழுவுக்குக் காங்கிரஸ் எ... மேலும் பார்க்க