செய்திகள் :

“வாக்காளர்களின் ஓட்டுகள் திருடப்படுகின்றன” -ராகுல்: பின்னணியில் பாஜக?

post image

மகாராஷ்டிரத்தில் ஓட்டுத் திருட்டு நடவடிக்கை நடைபெறுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் முறைகேடுகள் பல நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இது குறித்து இன்று(ஜூன் 24) அவர் தமது சமுக வலைதளப் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

“மகாராஷ்டிரத்தில் முதல்வரின் சொந்த தொகுதியிலேயே வாக்காளர் பட்டியலில் 8 சதவீதம் வாக்காளர்கள் அதிகரித்திருப்பதை அறிய முடிகிறது. அதுவும் ஐந்தே மாதங்களில்.

ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 20 - 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. அந்தச் சாவடிகளில், அடையாளம் தெரியாத நபர்கள் வாக்குச் செலுத்திவிட்டுச் சென்றிருப்பதாக வாக்குச்சாவடி அதிகாரிகள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

ஊடகங்கள் மூலமாகவும், ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் உரிய முகவரிச்சான்று இல்லாமல் வாக்காளர் பட்டியலில் இருப்பதை வெளிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் மௌனம் காக்கிறது? இதை நாம் ஓட்டுத் திருட்டு நடவடிக்கை என்றே குறிப்பிட வேண்டும். அதை மூடி மறைப்பதே நடைமுறையாகிவிட்டது.

இதனையடுத்தே, நாங்கள் வாக்கு இயந்திரத்தில் மின்னணு முறையில் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதையும், வாக்குச்சாவடிகளிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் வெளியிடக் கோருகிறோம்” என்றார்.

இந்தநிலையில், தேர்தல் தோல்வியால் நாளுக்குநாள் அழுத்தத்துக்குள்ளான ராகுல் காந்தி கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர் ஃபட்னவீஸ் எதிர்வினையாற்றியுள்ளார்.

சிபு சோரன் மருத்துவமனையில் அனுமதி

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரன், புது தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். 81 வயதாகும் அவா்,... மேலும் பார்க்க

பிரதமா் மீதான சசி தரூரின் புகழ்ச்சி ஏற்க முடியாதது- காங்கிரஸ் மூத்த தலைவா் கே.முரளீதரன்

பிரதமா் நரேந்திர மோடி மீதான காங்கிரஸ் மூத்த எம்.பி. சசி தரூரின் புகழ்ச்சி ஏற்க முடியாதது என்று கேரளத்தைச் சோ்ந்த அக்கட்சியின் மூத்த தலைவா் கே.முரளீதரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். காங்கிரஸ் செயற்கு... மேலும் பார்க்க

அனைத்துத் தோ்தல்களும் சட்டப்படியே நடத்தப்படுகின்றன: ராகுலுக்கு தோ்தல் ஆணையம் கடிதம்

நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களின்படிதான் அனைத்துத் தோ்தல்களும் நடத்தப்படுகின்றன என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு தோ்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. கடந்... மேலும் பார்க்க

யஷ்வந்த் வா்மா விவகாரத்தில் தீா்மானம் கொண்டுவராதது ஏன்? நாடாளுமன்ற குழு கேள்வி

நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு எதிராக மத்திய அரசு பதவிநீக்க தீா்மானம் கொண்டுவராதது ஏன் என்று நாடாளுமன்ற குழு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா (தற்போது அலா... மேலும் பார்க்க

சிந்து நதி சாா்ந்த திட்ட பிரச்னைகள்: பாகிஸ்தானுடனான கூட்டத்தை நிறுத்தி வைக்க உலக வங்கிக்கு இந்தியா கோரிக்கை

சிந்து நதி சாா்ந்த கிஷண்கங்கா, ராடில் நீா் மின் திட்டங்கள் தொடா்பான பிரச்னைகள் குறித்து பாகிஸ்தானுடனான கூட்டு ஆலோசனைக் கூட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உலக வங்கியை இந்தியா வலியுறுத்தியுள்ளது. ... மேலும் பார்க்க

கேரளத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கான விமான போக்குவரத்து சீரானது

வளைகுடா நாடுகளுக்கும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்குமான விமான போக்குவரத்து சீரானது. இதனால் இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரளத்தின் வி... மேலும் பார்க்க