செய்திகள் :

சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு!

post image

சீன துணை அதிபர் ஹான் ஜெங் உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (ஜூன் 24) சந்தித்தார்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்களுக்கான 20வது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை சந்தித்தார். அப்போது மாகாண எல்லைப் பகுதிகளில் அமைதியையும், நிலைத்தன்மையையும் காப்பதற்குத் தேவையான உறுதிகள் அளிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்க்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து சீன துணை அதிபர் ஹான் ஜெங்கையும் அஜித் தோவல் இன்று சந்தித்தார். இது குறித்து சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

ஜூன் 24ஆம் தேதி, பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்களுக்கான 20ஆம் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு சீன துணை அதிபர் ஹான் ஜெங் அழைப்பு விடுத்தார். மற்ற தூதுக்குழு தலைவர்களும் இதில் பங்கேற்றனர் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

சீன துணை அதிபர் உடனான சந்திப்பின்போது, இந்தியா - சீனா இடையிலான சமீபத்திய நிகழ்வுகள் குறித்துப் பேசப்பட்டது. இரு தரப்பில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் மேம்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

போா் நிறுத்தம்: இஸ்ரேல்-ஈரான் ஒப்புதல்

போரை நிறுத்த இஸ்ரேலும், ஈரானும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டன. அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் தலையீட்டால், 12 நாள்களாக இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமாக நடைபெற்று வந்த போா் முடிவுக்கு வந்துள்ளது. ஈரானின் ... மேலும் பார்க்க

ஈரான் - இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்தம்: அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இந்தியா வரவேற்பு

இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டதை வரவேற்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.மத்திய கிழக்கு ஆசியப் பகுதியிலுள்ள இரு பெரும் நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த இரு வார க... மேலும் பார்க்க

இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தால், அதை மதிப்போம்: ஈரான்

இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தால் அதனை ஈரான் மதிக்கும் என அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாள்களாக நடைபெற்றுவந்த மோதல் இன்றுடன் முடிவுக்கு வருவதாக அமெரிக்... மேலும் பார்க்க

இனி ஒரு குண்டுகூட பாயக்கூடாது! -இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் தமது தாக்குதல் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கறாராக எச்சரித்திருக்கிறார்.அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக தோழமை பாராட்டி வரும் யூத பூமியான இஸ்ரேலுக்... மேலும் பார்க்க

இருநாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளன: அதிபர் டிரம்ப்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றின் மீது கடந்... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா எனத் தெரியவில்லை: ரஷியா கருத்து

இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தம் நீடிக்குமா என்பது தெரியவில்லை என ரஷியா கருத்து தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் 12 நாள்களுக்குப் பிறகு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்... மேலும் பார்க்க