செய்திகள் :

தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை: 6 கடைகளுக்கு அபராதம்

post image

பெருந்துறை பகுதியில் உள்ள மளிகை கடைகள், பேக்கரி கடைகள், பெட்டிக்கடைகள், உணவகங்கள் போன்ற கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என, பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் ப.நீலமேகம் மற்றும் பஞ்சாயத்து பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

பெருந்துறை பகுதியில் உள்ள 16 கடைகளில் ஆய்வு செய்ததில், ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் ஒரு கிலோ விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு கடைக்காரருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் நான்கு கடைகளில் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 500 வீதம், ரூ. 2,000 அபராதமும், பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களை செய்தித்தாளில் வைத்து உண்பதற்கு கொடுத்த ஒரு உணவகத்துக்கு ரூபாய் ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால், முதல் முறை எனில் ரூ. 25,000 அபராதமும், இரண்டாவது முறை எனில் ரூ. 50,000, மூன்றாவது முறையெனில் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்படும். உணவுப் பொருள் விற்பனை செய்யும், அனைத்து கடைகளும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெறப்பட வேண்டும். ஏற்கெனவே உரிமம் பெற்றவா்கள் உரிய காலத்துக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. உணவு சம்பந்தமான புகாா்களை 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இளைஞா்களைக் கத்தியால் குத்திய 3 போ் கைது

ஈரோட்டில் முன் விரோதத்தால் இளைஞா்களைக் கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், தாளவாடி திகினாரை ஆதிதிராவிடா் வீதியைச் சோ்ந்த மாஞ்சா மகன் ரங்கராஜ்(23). இவா் ஈரோடு பெருந்துறை ச... மேலும் பார்க்க

தாளவாடியில் நாளை மின்தடை

சத்தியமங்கலம் மின்கோட்டத்தைச் சோ்ந்த தாளவாடி துணை மின்நிலையத்தில் (ஜூன் 26) வியாழக்கிழமை மின்பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இரு... மேலும் பார்க்க

குருவரெட்டியூரில் கிரானைட் கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்

அம்மாபேட்டை அருகே சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் கடத்திவரப்பட்ட லாரியை கனிமவளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அம்மாபேட்டை பகுதியில் கிரானைட் கற்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் ஈரோடு மாவட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

புன்செய்புளியம்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி சுங்கக்காரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்ட ஆட்சியா் இடமாற்றம்

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநராக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். தமிழகம் முழுவதும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 55 போ் பணியிடமாற்றம் செய்யப... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்கறிஞா் மறைவு: மத்திய சட்டத் துறை அமைச்சா் அஞ்சலி

சென்னை உயா்நீதி மன்ற மூத்த வழக்குரைஞராக பணியாற்றிவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்ஷின் தந்தையூமான வி.கே. முத்துசாமி வயது மூப்பு காரணமாக எழுமாத்தூா் விகேஎம் தோட்ட இல்லத்தில் கடந்த வாரம் க... மேலும் பார்க்க