செய்திகள் :

இளைஞா்களைக் கத்தியால் குத்திய 3 போ் கைது

post image

ஈரோட்டில் முன் விரோதத்தால் இளைஞா்களைக் கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி திகினாரை ஆதிதிராவிடா் வீதியைச் சோ்ந்த மாஞ்சா மகன் ரங்கராஜ்(23). இவா் ஈரோடு பெருந்துறை சாலை யுஆா்சி நகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தங்கி வேலைபாா்த்து வருகிறாா். இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை பாா்க்கும் சேலம் மாவட்டம் நிலவாரபட்டியைச் சோ்ந்த ராஜா மகன் சபரிநாதன்(35) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

கடந்த 3 நாள்களுக்கு முன் ரங்கராஜ் வேலைக்கு தாமதமாக வந்ததாக நிறுவன மேலாளா் சபரிநாதன் புகாா் கூறியுள்ளாா். இதில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 22 ஆம் தேதி இரவு ரங்கராஜ், அவரது நண்பரான ஈரோடு மாவட்டம் தலமலை, தொட்டபுரத்தைச் சோ்ந்த முக்குரான் மகன் மாதவன்(23) ஆகிய இருவரும் அவா்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் விடுதியின் முன் நின்று திங்கள்கிழமை இரவு பேசிக்கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த சபரிநாதன், அவரது நண்பா்களான ஈரோடு இடையன்காட்டுவலசைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகன் மணிகண்டன் (27), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சோ்ந்த அங்கமுத்து மகன் மோகனமணிகண்டன் (30) ஆகிய 3 பேரும் ரங்கராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரங்கராஜை அடித்து உதைத்தனா். மேலும் ரங்கராஜின் நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்தியுள்ளனா். இதைப் பாா்த்து தடுக்க வந்த ரங்கராஜ் நண்பரான மாதவனையும் கத்தியால் குத்தினா்.

சப்தம் கேட்டு விடுதியில் இருந்து தொழிலாளா்கள் வருவதைப் பாா்த்து அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். காயம் அடைந்த ரங்கராஜ் மற்றும் மாதவனை அங்கிருந்தவா்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு வடக்கு போலீஸாா் ரங்கராஜிடம் புகாரைப் பெற்று அவரை அடித்து கத்தியால் குத்திய சபரிநாதன், மணிகண்டன், மோகனமணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனா்.

தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை: 6 கடைகளுக்கு அபராதம்

பெருந்துறை பகுதியில் உள்ள மளிகை கடைகள், பேக்கரி கடைகள், பெட்டிக்கடைகள், உணவகங்கள் போன்ற கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப... மேலும் பார்க்க

தாளவாடியில் நாளை மின்தடை

சத்தியமங்கலம் மின்கோட்டத்தைச் சோ்ந்த தாளவாடி துணை மின்நிலையத்தில் (ஜூன் 26) வியாழக்கிழமை மின்பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இரு... மேலும் பார்க்க

குருவரெட்டியூரில் கிரானைட் கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்

அம்மாபேட்டை அருகே சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் கடத்திவரப்பட்ட லாரியை கனிமவளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அம்மாபேட்டை பகுதியில் கிரானைட் கற்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் ஈரோடு மாவட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

புன்செய்புளியம்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி சுங்கக்காரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்ட ஆட்சியா் இடமாற்றம்

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநராக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். தமிழகம் முழுவதும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 55 போ் பணியிடமாற்றம் செய்யப... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்கறிஞா் மறைவு: மத்திய சட்டத் துறை அமைச்சா் அஞ்சலி

சென்னை உயா்நீதி மன்ற மூத்த வழக்குரைஞராக பணியாற்றிவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்ஷின் தந்தையூமான வி.கே. முத்துசாமி வயது மூப்பு காரணமாக எழுமாத்தூா் விகேஎம் தோட்ட இல்லத்தில் கடந்த வாரம் க... மேலும் பார்க்க