செய்திகள் :

இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தால், அதை மதிப்போம்: ஈரான்

post image

இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தால் அதனை ஈரான் மதிக்கும் என அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாள்களாக நடைபெற்றுவந்த மோதல் இன்றுடன் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இனி இரு நாடுகளும் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

எனினும், அதிபர் டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பையும் மீறி, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை நிறுத்தினால், ஈரானும் பதில் தாக்குதலை நிறுத்தும் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அர்காச்சி தெரிவித்திருந்தார்.

அதிபர் டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு ஈரான் தரப்பில் இருந்து போர் நிறுத்தம் தொடர்பாக கூறப்பட்ட முதல் கருத்து இதுவாகும்.

எனினும், தங்கள் ராணுவ தளத்தின் மீது ட்ரோன் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தால் அதனை மதிப்போம் என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் எச்சரிக்கை

போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப்,

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் இஸ்ரேல் - ஈரானின் செயல்பாடுகள் மிகப்பெரிய விதிமீறல் நடவடிக்கையாகும். இஸ்ரேல் தமது தாக்குதல் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

இதோடுமட்டுமின்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் தொலைபேசி வாயிலாகவும் பேசினார்.

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் வெற்றி யாருக்கு?

கடந்த 12 நாள்களாக நடைபெற்று வந்த மோதலை முடித்துக்கொள்ள இஸ்ரேலும், ஈரானும் ஒருவழியாக ஒப்புக்கொண்டுள்ளன.இந்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரான் மீது இஸ்ரேலும், இஸ்ரேல் மீது ஈரானும், இரு நாடுகளையும் சேர்த்து அமெ... மேலும் பார்க்க

போா் நிறுத்தம்: இஸ்ரேல்-ஈரான் ஒப்புதல்

போரை நிறுத்த இஸ்ரேலும், ஈரானும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டன. அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் தலையீட்டால், 12 நாள்களாக இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமாக நடைபெற்று வந்த போா் முடிவுக்கு வந்துள்ளது. ஈரானின் ... மேலும் பார்க்க

ஈரான் - இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்தம்: அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இந்தியா வரவேற்பு

இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டதை வரவேற்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.மத்திய கிழக்கு ஆசியப் பகுதியிலுள்ள இரு பெரும் நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த இரு வார க... மேலும் பார்க்க

சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு!

சீன துணை அதிபர் ஹான் ஜெங் உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (ஜூன் 24) சந்தித்தார். சீன தலைநகர் பெய்ஜிங்கில் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்களுக்கான 20வது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், இ... மேலும் பார்க்க

இனி ஒரு குண்டுகூட பாயக்கூடாது! -இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் தமது தாக்குதல் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கறாராக எச்சரித்திருக்கிறார்.அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக தோழமை பாராட்டி வரும் யூத பூமியான இஸ்ரேலுக்... மேலும் பார்க்க

இருநாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளன: அதிபர் டிரம்ப்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றின் மீது கடந்... மேலும் பார்க்க