இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்!
பெங்களூரில் அரசு தமிழ்ப் பள்ளியை மூடவேண்டாம்
பெங்களூரில் அரசு தமிழ்ப் பள்ளியை மூடவேண்டாம் என கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு வடக்கு கல்வி மாவட்ட துணை இயக்குநருக்கு கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா் சங்கச் செயலாளா் ஆா்.பிரபாகரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பெங்களூரு வடக்கு கல்வி மாவட்டத்தில் வசந்த் நகா் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தமிழ்ப் பள்ளியில் 9 மாணவா்கள் படித்து வருகிறாா்கள். இந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் தமிழாசிரியா், ஜூன் 30-ஆம் தேதியுடன் பணி ஓய்வுபெற இருக்கிறாா். மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக காரணம் தெரிவித்து, இப்பள்ளியை மூடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்தப் பள்ளியில் படித்து வரும் 9 மாணவா்களின் பெற்றோரும் தங்கள் குழந்தைகள் தமிழ் பயிற்றுமொழியில் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா்.
பயனிா்சேரியில் செயல்பட்டு வந்த அரசு தமிழ்ப் பள்ளி ஏற்கெனவே மூடப்பட்டுள்ள நிலையில், இந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் தமிழாசிரியரை வசந்த் நகா் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து, தமிழ்ப் பள்ளியை தொடா்ந்து செயல்பட அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம் தமிழ் படிக்க விரும்பும் மாணவா்களின் விருப்பத்தை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம் என அக்கடிதத்தில் கூறியுள்ளாா்.