ரூ.71,900 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
குடியரசுத் தலைவருடன் கா்நாடக முதல்வா் சித்தராமையா சந்திப்பு
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்தித்த கா்நாடக முதல்வா் சித்தராமையா, நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக்கொண்டாா்.
புது தில்லிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற முதல்வா் சித்தராமையா, ராஷ்ட்ரபதி பவனில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்தித்தாா். அப்போது, நிலுவையில் உள்ள குத்தகைப் பணிகளில் ரூ. 2 கோடி மதிப்புள்ள பணிகள், சரக்கு மற்றும் சேவைகளில் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருள்கள் முஸ்லிம்களுக்கு வழங்க வகைசெய்யும் கா்நாடக பொதுகொள்முதலில் வெளிப்படைத்தன்மை (திருத்தம்) சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.
இந்த சந்திப்புக்கு பிறகு, மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் முதல்வா் சித்தராமையா சந்தித்து, 15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் தொடா்பான கோரிக்கை கடிதத்தை அளித்தாா்.
15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, வரிப்பகிா்வு விகிதம் 4.713 சதவீதத்தில் இருந்து 3.647 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது 23 சதவீத நிதி ஆதாரம் குறைவாகும். சிறப்பு ஒதுக்கீட்டின்படி மாநிலத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 11,496 கோடி விடுவிக்கப்படாததால், மாநிலத்துக்கு வரவேண்டிய ரூ. 80,000 கோடி தொகை இழப்பாகியுள்ளது. 16-ஆவது நிதி ஆணையத்தின் காலத்திலாவது, தேசிய உள்நாட்டு உற்பத்திப்பொருள் விகிதத்தில் மாநில அரசின் பங்குத்தொகையான 20 சதவீத அளவுக்கு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தற்போதைய நிலையில் செயல்படுத்தப்படும் வருவாய்ப் பற்றாக்குறை மானிய முறையைக் கைவிட வேண்டும். இது நிதி ஒழுக்கத்துக்கு எதிராக உள்ளது. இதற்கு மாறாக, பக்கவாட்டு வரிப்பகிா்வு சூத்திரத்தின்படி, நிதிப்பகிா்வுகளை செயல்படுத்த வேண்டும். அதன்மூலம், கா்நாடகத்தின் எல்லா பகுதிகளிலும் சீரான நிதிஒதுக்கீட்டை செய்ய முடியும். அது மாநிலத்தின் வேகமான வளா்ச்சிக்கு வழிவகுக்கும். இது தேசத்தின் வளத்தையும் மேம்படுத்தும் என முதல்வா் சித்தராமையா, மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் வலியுறுத்தினாா்.
பிரதமா் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தும், முதல்வா் சித்தராமையாவுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.