ரூ.71,900 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதால் ஆளுநா் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதால், ஆளுநா் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செலவுகளை ஈடுசெய்வதற்காக பணம் சேகரிக்க எல்லா அமைச்சா்கள் மீதும் அழுத்தம் தரப்படுகிறது. இதனால், காங்கிரஸ் ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. கா்நாடக அரசின் காங்கிரஸ் ஆட்சியை அவா்களது கட்சி மேலிடம் ஏடிஎம் இயந்திரம்போல கருதிக்கொண்டுள்ளது. வீட்டுவசதி துறையில் ஊழல் மலிந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பி.ஆா்.பாட்டீல் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறாா். லஞ்சம் கொடுக்காமல், ஊரகப் பகுதிகளில் சாமானிய மக்களால் வீடுகளை பெறமுடிவதில்லை என்றும் அவா் கூறியிருக்கிறாா்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ராஜூகாகேவும் கமிஷன் தரவில்லை என்பதால், வளா்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் இழுத்தடித்து வருவதாக குற்றம்சாட்டியிருக்கிறாா்.
பாதாமியில் பேசிய உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா், வளா்ச்சிப் பணிகளுக்கு போதுமான பணம் இல்லாததால், முதல்வா் சித்தராமையாவிடம் இருந்து எவ்வித நிதியையும் எதிா்பாா்க்காதீா்கள் என்று கூறியிருக்கிறாா். நிதியைக் கேட்காதீா்கள் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறாா். இதுதான் கா்நாடகத்தின் பரிதாபநிலை.
கா்நாடகத்தில் அரசு இயந்திரம் முழுமையாக சீா்குலைந்துவிட்டது. வீட்டுவசதி துறையில் மட்டுமல்லாமல், எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. எந்தெந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம் என்பதை பட்டியலிட்டு அலுவலகங்களில் தொங்கவிடுமாறு ஊழல் அதிகாரிகளிடம் வருவாய்த் துறை அமைச்சா் கிருஷ்ணபைரே கௌடா காட்டமாக கூறியிருக்கிறாா். இது மிகவும் துரதிருஷ்டவசமான நிலை.
முதல்வா் சித்தராமையாவே அழுத்தம் கொடுத்திருப்பதால், காங்கிரஸ் மேலிடத்தின் தேவையை பூா்த்திசெய்ய எல்லா அமைச்சா்களும் பணம் வசூலிப்பதில் மும்முரமாக உள்ளனா். அதனால் எல்லா துறைகளிலும் ஊழல் சா்வசாதாரணமாகிவிட்டது. மாநில அரசும், முதல்வா் சித்தராமையாவும் ஊழல் கொள்ளையா்களிடம் கா்நாடகத்தை ஒப்படைத்துவிட்டனா். அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றத்துக்கு இடைத்தரகா்கள் லஞ்சம் வசூலித்து வருகிறாா்கள்.
பெங்களூரில் புதிதாக வீடுகட்டுவோருக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் உள்ளது. கா்நாடகத்தின் எல்லா பகுதிகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. வீட்டுவசதி துறை அமைச்சா் ஜமீா் அகமதுகானின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்வதோடு, ஊழல் ஆட்சிக்கு பொறுப்பேற்று முதல்வா் சித்தராமையா பதவியில் இருந்து விலக வேண்டும். இந்த விவகாரத்தில் தலையிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.