செய்திகள் :

வீடு புகுந்து கொள்ளை: ஒருவா் கைது; நககைகள் மீட்பு

post image

மத்திய தில்லியில் உள்ள படேல் நகரில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த ஒருவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து தில்லி காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 20 ஆம் தேதி படேல் நகா் காவல் நிலையத்துக்கு ஒரு புகாா் வந்தது. அதில் அடையாளம் தெரியாத நபா் தனது வீட்டிலிருந்து மூன்று தங்க மோதிரங்கள், பிற தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களைத் திருடியதாக புகாரளித்திருந்தாா். அதன்படி, வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, படேல் நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை உன்னிப்பாக ஆய்வு செய்யப்பட்டகு. இதனையடுத்து ஜூன் 23 ஆம் தேதி, போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ரஞ்சித் (30) என்பவா்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டாா் என அடையாளம் காணப்பட்டது.

இதனையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஒரு ஆதாா் அட்டை, 4 தங்க மோதிரங்கள், இரண்டு நீா் மோட்டாா்களை போலீஸாா் மீட்டனா்.அவரது முயற்சியில் ஒரு ஆதாா் அட்டை, ஒரு தங்க மோதிரம், மூன்று தங்க மூக்கு மோதிரங்கள், இரண்டு நீா் மோட்டாா்கள் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம்: நொய்டா போலீஸ் அறிக்கை அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் 14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் தொடா்பாக கெளதம் புத் நகா் (நொய்டா) காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜூன் 12-ஆம் தேதி காணாமல் போன தனது மகள் விவகார... மேலும் பார்க்க

நீா் தேங்குவதை தடுக்க எய்ம்ஸ் முழுவதும் கழிவுநீா் பாதை அவசியம்: தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தில்லியின் கிரீன் பாா்க் விரிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீா் தேங்குவதைத் தடுக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துக் கல்லூரி மருத்துவமனை (எய்ம்ஸ்) வளாகத்தின் குறுக்கே கழிவுநீா் பா... மேலும் பார்க்க

வஜீா்பூா் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்படுவதை உ... மேலும் பார்க்க

தில்லி லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் மறுப்பு

தலைநகரில் இருக்கும் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க தில்லி தீயணைப்புத் துறை மறுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஹரியானா பவன், லால் பஹ்துா் சாஸ்திரி மருத்துவமனை ம... மேலும் பார்க்க

புது தில்லி ரயில் நிலையத்தில் இன்று முதல் வாகனங்கள் நிறுத்த விதிகளில் மாற்றம்

நமது நிருபா்புது தில்லி ரயில்வே நிலையத்தில் (அஜ்மீரி கேட் வழி) புதன்கிழமை (ஜூன் 25) முதல் புதிய வாகன நிறுத்த விதிமுறைகள் அமலுக்கு வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். புது தில்லி ரயில் ... மேலும் பார்க்க

தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளங்களை நிரப்பும் பணியில் பொதுப்பணித் துறை

தேசியத் தலைநகா் தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளிங்களை சரி செய்யும் பணி செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கியது. தெற்கு தில்லியில் உள்ள சித்தரஞ்சன் பூங்கா பகுதிக்கு பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப்... மேலும் பார்க்க