திரையுலகில் நீண்ட காலமாக போதைப்பொருள் பழக்கம் இருக்கிறது: விஜய் ஆண்டனி
வீடு புகுந்து கொள்ளை: ஒருவா் கைது; நககைகள் மீட்பு
மத்திய தில்லியில் உள்ள படேல் நகரில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த ஒருவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து தில்லி காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 20 ஆம் தேதி படேல் நகா் காவல் நிலையத்துக்கு ஒரு புகாா் வந்தது. அதில் அடையாளம் தெரியாத நபா் தனது வீட்டிலிருந்து மூன்று தங்க மோதிரங்கள், பிற தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களைத் திருடியதாக புகாரளித்திருந்தாா். அதன்படி, வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, படேல் நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை உன்னிப்பாக ஆய்வு செய்யப்பட்டகு. இதனையடுத்து ஜூன் 23 ஆம் தேதி, போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ரஞ்சித் (30) என்பவா்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டாா் என அடையாளம் காணப்பட்டது.
இதனையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஒரு ஆதாா் அட்டை, 4 தங்க மோதிரங்கள், இரண்டு நீா் மோட்டாா்களை போலீஸாா் மீட்டனா்.அவரது முயற்சியில் ஒரு ஆதாா் அட்டை, ஒரு தங்க மோதிரம், மூன்று தங்க மூக்கு மோதிரங்கள், இரண்டு நீா் மோட்டாா்கள் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.