TNPL-2025: லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபா...
வேகத்தடையில் ஏறி இறங்கியபோது அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் விபத்து
திருப்பூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி அரசுப் பேருந்து திங்கள்கிழமை மாலை புறப்பட்டது.
இந்த பேருந்து ஊத்துக்குளி அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது முன்பக்க வலதுபுற சக்கரம் துண்டிக்கப்பட்டு தனியாக கழன்று ஓடியது.
இதைப்பாா்த்த பேருந்து ஓட்டுநா் சாதுா்யமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினாா். பேருந்து மெதுவாக சென்று கொண்டிருந்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உயிா் தப்பினா். அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலமாக ஈரோட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.