செய்திகள் :

ஸ்ரீகாந்த் விவகாரம்: வெளியானது காவல்துறை அறிக்கை

post image

சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை(ஜூன் 23) சென்னையில் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் காவல்துறை இன்று(ஜூன் 24) அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனிடையே அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தன்னை போதைப்பொருள் பயன்படுத்த பழக்கப்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். படத்தில் நடித்ததற்காக தனக்கு தர வேண்டிய ரூ. 10 லட்சத்திற்கு கொகைன் போதைப்பொருளை பிரசாத் கொடுத்ததாகவும் இதனால் அதற்கு தான் அடிமையானதாகவும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7 வரை நீதிமன்றக் காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு போதைப்பொருள் வழங்கியதாக கண்டறியப்பட்ட சேலம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த பிரதீப்குமாா் என்ற பிரடோ, சா்வதேச போதைப் பொருள்கடத்தல் கும்பலைச் சோ்ந்த மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சோ்ந்த ஜான் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்தநிலையில், பிரதீப் அளித்த தகவலின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தற்போது காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தினரா என்பது விசாரணையில் தெரியவரும். அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது உறவினர்களிடம் சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பெற்றுக்கொண்டு கிருஷ்ணா விரைவில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, காவல்துறை இன்று(ஜூன் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தற்போது தலைமறைவாகியிருக்கும் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 8 அரசு அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

பாஜக தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் உள்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடலூா் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி... மேலும் பார்க்க

50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் வசதி: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சைகளைத் தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ள ... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு: திமுக உறுப்பினா் சோ்ப்பு ஜூலை 1-இல் தொடக்கம்

‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் பெயரில் திமுக உறுப்பினா் சோ்ப்பு ஜூலை 1-இல் தொடங்கவுள்ளது. இதை முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். இதுகுறித்து திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.... மேலும் பார்க்க

காங்கயத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 150 விவசாயிகள் கைது!

திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் சாலை மறியல் ஈடுபட்ட 150 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.காங்கயம் அருகே பிஏபி வாய்க்காலில் கடைமடை பகுதியான வெள்ளக்கோவில் பகுதிக்கு பாசன நீர் சரியான அளவில் விநியோகம் செய... மேலும் பார்க்க

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது: அன்பில் மகேஸ்

பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் இந்து மத அடையாளங்களுடன் செல்ல வேண்டும் என்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். மதுரையில் ப... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு இழப்பீடு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

மாம்பழக் கொள்முதல் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகிய... மேலும் பார்க்க