செய்திகள் :

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது: அன்பில் மகேஸ்

post image

பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் இந்து மத அடையாளங்களுடன் செல்ல வேண்டும் என்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

இதில் பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, பள்ளிகளுக்குச் செல்லும் இந்து சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் நெற்றியில் திருநீறும் கழுத்தில் ருத்ராட்ச மாலையும் அணிந்து செல்ல வேண்டும் என்று கூறினார். இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்,

"எந்த மதத்திலும் குறுக்கிட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அவரவர்களுக்கு அதன் மேல் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், பள்ளிக்கூடம் என்பது பொதுவானதாக இருக்க வேண்டும். அனைவரும் வரவேற்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

காமராஜர் சீருடை என்ற நடைமுறையை எதற்கு கொண்டு வந்தார்? அது சீருடை என்பது மட்டுமல்ல, அனைவரும் பொதுவாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, அண்ணாமலையின் கருத்து பிற்போக்கு சிந்தனையைத்தான் காட்டுகிறதே தவிர வேறு விதமாக நான் பார்க்கவில்லை" என்று கூறினார்.

இஸ்ரேல் - ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா எனத் தெரியவில்லை: ரஷியா கருத்து

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்கள் மீட்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்க... மேலும் பார்க்க

விரைவில் சுற்றுப்பயணம்: எடப்பாடி பழனிசாமி

தோ்தலுக்கு நிா்வாகிகளை தயாா்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். 2026 பேரவைத் தோ்தலுக்கு தயாராகும்... மேலும் பார்க்க

ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்

தமிழக காவல் துறையில் நிா்வாகப் பிரிவு ஐ.ஜி.யான வி.பாலகிருஷ்ணன், மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் நிா்வாகப் பிரிவில் ஐ.ஜி.யாக பொறுப்பு வகிக்கும் அவா், இத... மேலும் பார்க்க

மாநில தகவல் ஆணையத்தின் 2 புதிய ஆணையா்கள் பதவியேற்பு

மாநில தகவல் ஆணையத்துக்கு நியமிக்கப்பட்ட இரு புதிய ஆணையா்கள் ஆளுநா் ஆா்.என்.ரவி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனா். வெளிப்படைத்தன்மைக்கு குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தகவல் அறிவும் உரிமைச் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மதுரை உள்பட 5 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சட்டப் போராட்டம் தொடரும்: அமைச்சா் அன்பில் மகேஸ் திட்டவட்டம்

தமிழக பள்ளிக் கல்விக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியைப் பெறுவதற்கான சட்டப் போராட்டம் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தாா். தமிழக பள்ளிக்கல்வித் துறையில... மேலும் பார்க்க