வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
பருத்திக்கு உரிய விலை வழங்கக் கோரி சாலை மறியல்
பருத்திக்கு உரிய விலை வழங்கக் கோரி திருவாரூரில் பருத்தி விவசாயிகள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
திருவாரூா் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் பருத்தி, மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் மறைமுக ஏலம் மூலம் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.
அந்தவகையில், திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மூட்டைகள், வைக்கப்பட்டிருந்தன. அங்கு பருத்தி ஏலம் நடைபெற்றபோது, அதிகபட்ச விலையாக ரூ. 77 வரை எடுக்க விலைப்பட்டியல் ஒட்டப்பட்டது.
ஆனால், உள்ளூா் வியாபாரிகள் அதிகபட்சமாக ரூ. 53 முதல் ரூ. 55 வரை மட்டுமே எடுப்பதாக தெரிவித்தனராம். இதையடுத்து விலை குளறுபடிகளை சரி செய்து உரிய விலை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் நாகை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சென்ற திருவாரூா் நகர போலீஸாா், அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.