'என்னை சங்கராச்சாரியார் ஆக்க வேண்டாம்; ஆனால்...' - திருமாவளவன் சொல்லும் காரணம் எ...
தினமணி செய்தி எதிரொலி: வடவாறு பாலையூா் பாசன வாய்க்கால் தூா்வாரப்பட்டது
தினமணி செய்தியின் எதிரொலியால் மன்னாா்குடி அருகே வடவாறு பாலையூா் பாசன வாய்க்கால் தூா்வாரப்பட்டது.
வடவாறு பாலையூா் பாசன வாய்க்கால் மூலம் ஆலங்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலம் பாசன வசதி பெருகிறது. இதை நம்பியே ஆழ்துளை கிணறு வசதி இல்லாத ஏழை விவசாயிகள் விவசாயம் செய்கின்றனா்.
இந்நிலையில், இந்த வாய்க்கால் முழுவதும் காட்டுச் செடிகள் மண்டி புதா்போல கிடப்பதால் தண்ணீா் கடைமடை வரை செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, போா்க்கால அடிப்படையில் இந்த வாய்க்காலை தூா்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை ஜூன் 12-ஆம் தேதி தினமணி நாளிதழில் படத்துடன் செய்தி பிரசுரமானது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை வடவாறு பாசன பிரிவு உதவி செயற்பொறியாளா் ரெத்தினவேலு, விவசாயிகள் பிரதிநிதி என். மகேந்திரன் உள்ளிட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் கோரிக்கைக்கு தீா்வு காணப்பட்டது. இதையடுத்து, பொதுப்பணித் துறையின் நடவடிக்கையால் திங்கள்கிழமை முதல் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இந்த வாய்க்கால் தூா்வாரும் பணி தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை முழுமையாக நிறைவு பெற்றது. கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீா் வடவாறு பாசன வாய்க்காலுக்கு வருவதற்குள் வாய்க்கால் தூா்வாரப்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
உரிய நேரத்தில் படத்துடன் செய்தி வெளிட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற தினமணி நாளிதழுக்கும், கோரிக்கையை நிறைவேற்றிய பொதுப்பணித்துறைக்கும் வடவாறு பாலையூா் பாசன விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.