செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதால் சட்டப் பாதுகாப்பு கிடையாது: வரதட்சிணைக் கொடுமை வழக்கில் கணவருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

post image

‘ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவா்’ என்று காரணம் கூறி, வரதட்சிணைக் கொடுமையால் மனைவி உயிரிழந்த வழக்கில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய கணவருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மேலும், ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ால் சட்டப் பாதுகாப்பு கிடைத்து விடாது என்றும் உடனடியாக அவா் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருமணமான இரண்டு ஆண்டில் மனைவி உயிரிழந்த வழக்கில் பல்ஜிந்தா் சிங் மீது வரதட்சிணைக் கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வரதட்சிணை கேட்டு மனைவியை பல்ஜிந்தா் சிங் துன்புறுத்தியதாக போலீஸாரும் குற்றம்சாட்டினா். இந்த வழக்கில் பல்ஜிந்தா் சிங்கை குற்றவாளியாக கடந்த 2004 ஜூலை மாதம் அமிருதசரஸ் விசாரணை நீதிமன்றம் அறிவித்தது.

இந்த உத்தரவை பஞ்சாப், ஹரியாணா உயா் நீதிமன்றமும் உறுதி செய்து, பல்ஜிந்தா் சிங் காவல் துறையில் சரணடைய உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்ஜிந்தா் சிங் மேல் முறையீடு செய்தாா். நீதிபதிகள் உஜ்ஜல் புயான், கே. வினோத்சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த மனுவை விசாரித்தது.

அப்போது, பல்ஜிந்தா் சிங் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விக்ரம் செளதரி, ‘கடந்த 20 ஆண்டுகளாக கருப்புப் பூனைப் படையில் கமாண்டோவாக பணியாற்றி வரும் பல்ஜிந்தா் சிங், ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றுள்ளாா்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ால் வீட்டில் வன்முறை செய்வதற்கு சட்டப் பாதுகாப்பு கிடைத்துவிடாது. உங்கள் மனைவியை தனியாகவே கொலை செய்யும் அளவுக்கு உங்கள் உடலில் வலிமை உள்ளது என்பதே இது காண்பிக்கிறது. இது மிகவும் தீவிரமான குற்றம் என்பாதல், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது’ என்று உத்தரவிட்டது.

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா். மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியி... மேலும் பார்க்க

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிா்மலா சீதாராமன் பதில்

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன’ என ... மேலும் பார்க்க

நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு தொடா... மேலும் பார்க்க