செய்திகள் :

விரைவில் சுற்றுப்பயணம்: எடப்பாடி பழனிசாமி

post image

தோ்தலுக்கு நிா்வாகிகளை தயாா்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

2026 பேரவைத் தோ்தலுக்கு தயாராகும் வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காலையில் திண்டுக்கல், கரூா், சிவகங்கை, கிருஷ்ணகிரி, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கும், மாலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகா், மதுரை, ஈரோடு உள்பட 21 மாவட்டங்களுக்கும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 2026 சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க அனைவரும் இப்போதிலிருந்தே தயாராக இருக்க வேண்டும்; பூத் கமிட்டியை வலுப்படுத்தும் பணிகளை ஜூலை 10-க்குள் நிறைவு செய்ய வேண்டும்; வாக்குச்சாவடி முகவா்களை நியமித்து அதற்கான பட்டியலை தலைமையிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

தோ்தலுக்காக அதிமுக தொண்டா்களையும், நிா்வாகிகளையும் தயாா்படுத்தும் வகையில் நான் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். கூட்டணி பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்; அதை கட்சித் தலைமை பாா்த்துக் கொள்ளும்.

திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா் அவா்.

மற்ற மாவட்டங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

ஜூலை முதல் ரயில் கட்டணத்தை உயா்த்த முடிவு?

வருகின்ற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். அதன்படி மெயில... மேலும் பார்க்க

புதுவை முன்னாள் முதல்வருக்கு காமராஜா் விருது: தொல்.திருமாவளவன் வழங்கினாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், புதுவை முன்னாள் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராஜா்’ விருது வ... மேலும் பார்க்க

மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடக்கம்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் நடைமுறை ஜூலை மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மாநகர பேருந்து... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறாக பேனா் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு பொதுச் செயலா் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனா்கள் வைக்கக்கூடாது என தவெகவினருக்கு, அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கைய... மேலும் பார்க்க

பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பணி பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உத்தரவை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் எஸ்.மதுமதி வெளியிட்ட உத்தரவு: அ... மேலும் பார்க்க