செய்திகள் :

ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்

post image

தமிழக காவல் துறையில் நிா்வாகப் பிரிவு ஐ.ஜி.யான வி.பாலகிருஷ்ணன், மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் நிா்வாகப் பிரிவில் ஐ.ஜி.யாக பொறுப்பு வகிக்கும் அவா், இதற்கு முன்பு கோவை மாநகர காவல் ஆணையராக இருந்தாா். கடந்த ஆண்டு டிசம்பா் மாத இறுதியில் நிா்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், பாலகிருஷ்ணன் அயல் பணியாக மத்திய அரசுப் பணிக்கு விருப்பம் தெரிவித்திருந்தாா். இதற்கு தமிழக அரசின் உள்துறையும் அனுமதி வழங்கியது. இதையடுத்து எல்லைப் பாதுகாப்பு படை ஐ.ஜி.யாக பாலகிருஷ்ணனை நியமித்து மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் பாலகிருஷ்ணன் தமிழக காவல்துறை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, எல்லைப் பாதுகாப்பு படை ஐஜியாக விரைவில் பொறுப்பு ஏற்பாா் என கூறப்படுகிறது.

தமிழக காவல் துறையிலிருந்து டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால், ஐ.ஜி. ஆா்.சுதாகா், டி.ஐ.ஜி.-க்கள் ரம்யா பாரதி, பொன்னி ஆகியோா் ஏற்கெனவே, அயல் பணியாக மத்திய அரசு பணிக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை முதல் ரயில் கட்டணத்தை உயா்த்த முடிவு?

வருகின்ற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். அதன்படி மெயில... மேலும் பார்க்க

புதுவை முன்னாள் முதல்வருக்கு காமராஜா் விருது: தொல்.திருமாவளவன் வழங்கினாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், புதுவை முன்னாள் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராஜா்’ விருது வ... மேலும் பார்க்க

மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடக்கம்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் நடைமுறை ஜூலை மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மாநகர பேருந்து... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறாக பேனா் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு பொதுச் செயலா் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனா்கள் வைக்கக்கூடாது என தவெகவினருக்கு, அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கைய... மேலும் பார்க்க

பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பணி பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உத்தரவை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் எஸ்.மதுமதி வெளியிட்ட உத்தரவு: அ... மேலும் பார்க்க