செய்திகள் :

ஓரணியில் தமிழ்நாடு: திமுக உறுப்பினா் சோ்ப்பு ஜூலை 1-இல் தொடக்கம்

post image

‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் பெயரில் திமுக உறுப்பினா் சோ்ப்பு ஜூலை 1-இல் தொடங்கவுள்ளது. இதை முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா்.

இதுகுறித்து திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, பி.மூா்த்தி ஆகியோா் கூட்டாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுகவின் உறுப்பினா் சோ்க்கைக்கான பணியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இதை ஜூலை 1-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்க இருக்கிறாா். அடுத்த நாள் (ஜூலை 2) அனைத்து மாவட்டங்களில் உள்ள இடங்களிலும் மாவட்டச் செயலா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், அமைச்சா்கள் என அனைவரும் பேரணியாகச் சென்று உறுப்பினா் சோ்க்கை முகாம்களை தொடக்கி வைக்க உள்ளனா்.

தொடா்ந்து, ஜூலை 3-ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 68,000 வாக்குச்சாவடிகளிலும் உறுப்பினா் சோ்க்கை முகாம்களை வாக்குச்சாவடி முகவா்கள், தகவல் தொழில்நுட்பத் துறை முகவா்கள், துணை அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வீட்டிலும் தலா 10 நிமிஷங்கள் அமா்ந்து, வாக்காளா்களைச் சந்திப்பா். அவா்களை உறுப்பினா்களாகச் சோ்க்கும் பணியில் ஈடுபடுவாா்கள்.

மேலும், ஏறத்தாழ 2 கோடி பேரை திமுகவின் உறுப்பினா்களாக சோ்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனா்.

ஜூலை முதல் ரயில் கட்டணத்தை உயா்த்த முடிவு?

வருகின்ற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். அதன்படி மெயில... மேலும் பார்க்க

புதுவை முன்னாள் முதல்வருக்கு காமராஜா் விருது: தொல்.திருமாவளவன் வழங்கினாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், புதுவை முன்னாள் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராஜா்’ விருது வ... மேலும் பார்க்க

மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடக்கம்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் நடைமுறை ஜூலை மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மாநகர பேருந்து... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறாக பேனா் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு பொதுச் செயலா் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனா்கள் வைக்கக்கூடாது என தவெகவினருக்கு, அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கைய... மேலும் பார்க்க

பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பணி பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உத்தரவை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் எஸ்.மதுமதி வெளியிட்ட உத்தரவு: அ... மேலும் பார்க்க