செய்திகள் :

மா விவசாயிகளுக்கு இழப்பீடு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

post image

மாம்பழக் கொள்முதல் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது.

மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திட வழிகாட்டுதல்கள் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திடவும் -

பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வு முறையில் மாநில அரசும் மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் பிஎம் - ஆஷா சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தவும் வலியுறுத்தி

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 8 அரசு அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

பாஜக தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் உள்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடலூா் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி... மேலும் பார்க்க

50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் வசதி: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சைகளைத் தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ள ... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு: திமுக உறுப்பினா் சோ்ப்பு ஜூலை 1-இல் தொடக்கம்

‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் பெயரில் திமுக உறுப்பினா் சோ்ப்பு ஜூலை 1-இல் தொடங்கவுள்ளது. இதை முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். இதுகுறித்து திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.... மேலும் பார்க்க

ஸ்ரீகாந்த் விவகாரம்: வெளியானது காவல்துறை அறிக்கை

சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை(ஜூன் 23) சென்னையில் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் காவல்துறை இன்று(ஜூன் 24) அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனிடையே அதிமுக முன்னாள் நிர்வாகி... மேலும் பார்க்க

காங்கயத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 150 விவசாயிகள் கைது!

திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் சாலை மறியல் ஈடுபட்ட 150 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.காங்கயம் அருகே பிஏபி வாய்க்காலில் கடைமடை பகுதியான வெள்ளக்கோவில் பகுதிக்கு பாசன நீர் சரியான அளவில் விநியோகம் செய... மேலும் பார்க்க

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது: அன்பில் மகேஸ்

பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் இந்து மத அடையாளங்களுடன் செல்ல வேண்டும் என்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். மதுரையில் ப... மேலும் பார்க்க