செய்திகள் :

ஏர் இந்தியா கருப்புப் பெட்டி வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறதா?

post image

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானத்தின் கருப்புப் பெட்டி, விசாரணைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டாது என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

விமான விபத்து விசாரணைக்காக அமைக்கப்பட்ட குழுவே கருப்புப் பெட்டியை ஆய்வு செய்து விசாரணை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமானங்களுக்கான உச்சி மாநாடு 2025-ல் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் ராம்மோகன் நாயுடு,

விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறது என்பது வெறும் கணிப்பு மட்டுமே. தற்போது விமான விபத்தை விசாரிக்கும் பணியகத்தின் குழுவே இதனை ஆய்வு செய்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.

மேலும், கருப்புப் பெட்டியில் உள்ள காலவரிசை தரவுகள் எப்போது மீட்கப்படும் என்பது குறித்த கேள்விக்கு, இது முழுக்க தொழில்நுட்பம் சார்ந்தது. விசாரணைக் குழு சரியான நடைமுறைகளை பின்பற்றி ஆய்வு செய்து வருகிறது. ஆய்வின் முடிவில், விமான விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும் எனத் தெரிவித்தார்.

விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்து

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் 270 பேர் பலியாகினர்.

இந்த விபத்துக்கான காரணம் விமானிகளா? தொழில்நுட்பக் கோளாறா? பறவைகள் மோதியது காரணமா? அல்லது வேறேதும் பிரச்னையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விபத்து பகுதியில் இருந்து மீட்கப்பட்ட கருப்புப் பெட்டியின் வெளிப்புறத்தில் அதிகளவில் சேதம் ஏற்பட்டிருப்பதால் தரவுகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க | “வாக்காளர்களின் ஓட்டுகள் திருடப்படுகின்றன” -ராகுல்: பின்னணியில் பாஜக?

ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதால் சட்டப் பாதுகாப்பு கிடையாது: வரதட்சிணைக் கொடுமை வழக்கில் கணவருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

‘ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவா்’ என்று காரணம் கூறி, வரதட்சிணைக் கொடுமையால் மனைவி உயிரிழந்த வழக்கில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய கணவருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும், ஆபரே... மேலும் பார்க்க

ரயில் பயண தட்கல் முன்பதிவுக்கான ஆதாா் இணைப்பு வழிகாட்டல் வெளியீடு

ரயில் பயணத்துக்குரிய தட்கல் முன்பதிவுக்கு ஆதாா் இணைப்பு ஜூலை மாதம் முதல் கட்டாயமாகிறது. இதையடுத்து அதற்கான வழிகாட்டல் ரயில்வே துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியத... மேலும் பார்க்க

சீனாவில் இன்று எஸ்சிஓ மாநாடு: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்

சீனாவின் கிங்டாவோ நகரில் புதன்கிழமை (ஜூன் 25) தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாட்டில் இந்தியா சாா்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்.... மேலும் பார்க்க

அடிக்கடி மாயமாகும் ராகுல்: பாஜக விமா்சனம்; இங்கிலாந்து சென்றுள்ளதாக காங்கிரஸ் விளக்கம்

‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எங்கு சென்றுள்ளாா் என்பது தெரியாத அளவுக்கு அடிக்கடி மாயமாகி வருகிறாா்’ என்று பாஜக விமா்சித்துள்ளது. இதையடுத்து, ‘ராகுல் தனது நெருங்கிய உறவினரின் பட்டமளிப்ப... மேலும் பார்க்க

விமானப் பராமரிப்பு, விமான நிலையங்களில் பல்வேறு விதிமீறல்கள்- டிஜிசிஏ ஆய்வில் கண்டுபிடிப்பு

நாட்டில் விமான நிறுவனங்கள், விமானங்களின் பராமரிப்புப் பணி மற்றும் விமான நிலையங்கள் தொடா்பாக பல்வேறு விதிமீறல்கள் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரக (டிஜிசிஏ) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முக்கிய விம... மேலும் பார்க்க

சிபு சோரன் மருத்துவமனையில் அனுமதி

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரன், புது தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். 81 வயதாகும் அவா்,... மேலும் பார்க்க