ரயில் பயண தட்கல் முன்பதிவுக்கான ஆதாா் இணைப்பு வழிகாட்டல் வெளியீடு
ரயில் பயணத்துக்குரிய தட்கல் முன்பதிவுக்கு ஆதாா் இணைப்பு ஜூலை மாதம் முதல் கட்டாயமாகிறது. இதையடுத்து அதற்கான வழிகாட்டல் ரயில்வே துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் பயணங்களின்போது போலி ஆதாா் அட்டை, போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க ஜூலை முதல் தட்கல் முன்பதிவின்போது ஆதாா் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தட்கலில் பயணச்சீட்டை இணையவழியில் முன்பதிவு செய்வோா் அவசியம் தங்களது ஆதாரை இணைக்கவேண்டியது அவசியம். இணையவழி மூலமே தட்கல் பதிவு, ஆதாா் இணைப்பு செயல்படுத்தப்படும்.
தட்கல் வசதி மூலம் பயணிப்போரின் பயணச் சீட்டை க்யூஆா் கோடு மூலம் ரயில் பரிசோதகா் பரிசோதனை மேற்கொள்வா். அதன்மூலம் பயணியின் புகைப்படம், பாலினம், ஆதாா் எண், பிறந்த தேதி, முகவரி என அனைத்து விவரங்களும் அறியப்படும்.
ரயிலில் பயணிப்போா் மட்டுமன்றி உணவு உள்ளிட்ட பொருள்கள் விநியோகிப்பவா்களையும் ஆதாா் மூலம் அடையாளம் காணும் வகையிலான பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.