செய்திகள் :

உனக்காக என் தாயிடம் கூட சண்டை போட்டுள்ளேன்! - 90ஸ் அம்மாவின் மடல் | #உறவின்கடிதம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

என் அன்பு மகள் ஆதினிக்கு,

கண்மணியே, உனக்கு நான் எழுதும் முதல் கடிதம் இது. ஜூலை மாதம் வரவிருக்கும் உன் இரண்டாவது பிறந்தநாளிற்கு முதலில் என் வாழ்த்துக்கள்.

இந்த கடிதத்தை நீ எப்பொழுது படிக்கப் போகிறாய்?

நீ தமிழை கற்றுக்கொண்டதும் படிப்பாயா? பத்து வயதில் எழுத்துக் கூட்டாமல் படிக்கத் தொடங்குகிறாய் என்றால் இதை நீ அப்பொழுது படிக்கும் பொழுது எழுத்தின் வலிமை வார்த்தைகளின் அர்த்தம் உணர்வு சூழ புரிந்து கொள்வாயா?

நான் என் அம்மா(உன் அம்மம்மா)விடம் என்னை குழந்தையாக இருக்கும் பொழுது எப்படி வளர்த்தாய் என்று கேட்டால் பெரிதாக நினைவில் இல்லை. சோறு ஊட்டுவோம். அடம் பிடித்தால் அடித்து வளர்த்தோம் என்கிறார்.

எனக்கோ என் குழந்தைப் பருவத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசை.

அப்படி ஓர் ஆசை உனக்குள் எழும்பொழுது நான் ஒரு வேளை சிறு சிறு விஷயங்களை மறந்து விட்டால். அதற்காகத் தான் இப்பொழுதே உனக்கொரு கடிதம் எழுதுகிறேன்.

இரண்டு வருடங்கள் அதற்குள் சென்று விட்டதே என்று சொல்லும் அளவிற்கு நாட்கள் சுலபமாக செல்லவில்லை.

முதல் முறை உன்னைப் பார்த்த நொடி இன்றும் பசுமையாய் என் மனதில் நிற்கின்றது அமுதே.

அறுவை சிகிச்சை முடிந்து மயக்கத்தில் இருந்த என்னிடம் முதல் முறையாக உன் அப்பா தான் காண்பித்தார். நான் உன்னைப் பார்க்கும் முன்பே அவர் உன்னைப் பார்த்து விட்டார்.

உன்னைப் பார்த்த அந்த நொடி வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரானாந்தம் தந்த நொடி.. என்னில் இருந்து எங்களைப் போல வந்த அதிசயமடி நீ! இன்னும் முழுதாய் திறக்காத இமைகளினூடே உன் குட்டி கண்களால் என்னை கண் சிமிட்டி சமர்த்து குழந்தையாய் பார்த்தாயே.. அப்பொழுதே நான் புதிதாய் பிறந்து விட்டேன் உன் அம்மாவாக வாழ.

முதல் சில நாட்கள் உன்னைத் தூக்க உனக்குப் பால் கொடுக்க உன்னை தூங்க வைக்க என ஒவ்வொன்றிற்கும் மிகவும் சிரமப்பட்டேன் அம்மு. போகப் போக ஒவ்வொன்றாய் பழகிக் கொண்டேன்.

உன்னை அவ்வப்போது இரசித்து கொள்வேன். உன் குட்டி கை கால் விரல்களுக்கு பல முத்தங்களிடுவேன்.

உன் சிரிப்பை கண்டு மயங்குவேன். உன் எச்சில் வாசத்தில் கிறங்குவேன்.

அன்றொரு முறை நீ அழும்பொழுது என்னென்னவோ சத்தம் எழுப்பிவிட்டு நடுவில் அம்ம்ம்மாஆஆஆ என்று அழுதாய்.

வீட்டில் உள்ளவர்களிடம் கூறினால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 'குழந்தை அழற சத்தத்துல பல வார்த்தை கேட்கும் உனக்கு அம்மான்னு கேட்டுச்சா' என்றார்கள்.

எது எப்படியோ நீ என்னை அன்றே அம்மாவென்று அழைத்து விட்டதாய் தான் நான் உணர்கிறேன் என் மயக்குறு மகளே.

நீ ஒவ்வொன்றும் புதியதாய் செய்யும் பொழுது நான் ஆச்சர்யமாய் பார்ப்பேன். மனித பிறவியின் வளர்ச்சி எப்படி அமைகின்றது என்பதை புரியவைத்தவள் நீ.

நீ தூங்கும் பொழுது உன்னைப் பாட்டுப்பாடி தூங்க வைக்கப் பிடிக்கும். தூரி ஆட்டும் பொழுது சினிமா பாடல்களை பாடுவேன். அதில் உனக்கு ஆனந்த யாழை பாடல் மிகவும் பிடிக்கும்.

அந்த பாடல் பாடும் பொழுது உனக்கு என்ன அர்த்தம் புரிகின்றதோ நீ உணர்வு பூர்வமாய் என்னைப் பார்க்கும் பொழுது எனக்கு என்னவோ போல் இருக்கும்.

உன் முதல் உணவு... உனக்கு திட உணவை ஆரம்பிப்பதற்குள் வீட்டில் உள்ளவர்களிடம் எவ்வளவு சண்டை போட்டேன் தெரியுமா.

கஞ்சி வகைகள், காய்கறி பழங்கள் என வீட்டில் சமைத்து ஆரோக்கியமான உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உனக்கு சேர்க்க நினைத்தேன்.

கடைகளில் கிடைக்கும் செரலாக்கை ஊட்ட வேண்டும் அதில் தான் எடை போடும் என்பது பெரியவர்களின் எண்ணம். இப்படி ஆரம்பித்து விட்டால் அப்புறம் எதுவுமே என் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போய்விடும் என்கிற பயம்.

உன்னால் எனக்குப் புகுந்த வீட்டில் இருந்த நல்ல பெயரும் சில இடங்களில் அடிபட்டு விட்டது. பின் என்ன அவர்கள் பிள்ளைகளை வளர்த்தி இருக்கலாம் ஆனால் இப்பொழுது இருக்கும் சூழலில் உணவுகளை பற்றிய விழிப்புணர்வும் வேண்டும் அல்லவா. அந்த விஷயத்தில் நான் சொல்வதை கொஞ்சம் கேட்கலாம் அல்லவா.

இன்னும் கூட அவ்வப்போது உணவு விஷயத்தில் சண்டைகள் எழுகின்றன. துரித உணவுகளோ உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களையோ உனக்கு தர நான் அனுமதிப்பதில்லை.

நானும் உனக்கு எப்பொழுதாவது கொஞ்சம் தரத்தான் போகிறேன். ஆனால் அந்த உணவின் சுவை கண்டு பழங்கள் காய்கறிகள் சாப்பிடாமல் போய்விட்டால்.

இப்படிப்பட்ட என் தாய்மையின் தவிப்பை மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா. அப்படி நடக்காதபோது கோபம் எழுகிறது. பரவாயில்லை உனக்காகத்தான் எல்லாம். என்னையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.

சில நேரம் உனக்காக என் தாயிடம் கூட சண்டை போட்டுள்ளேன். நான் பெற்றவளுக்காக என்னைப் பெற்றவளை எதிர்த்த தருணங்கள்.

அதற்காக எல்லாவற்றையும் என்னால் சரி செய்ய முடியாது. அன்றொரு நாள் உன் அப்பாவின் அண்ணா ஒருவர் நம் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் மேல் அத்தனை வாசனை திரவிய நெடி. உன்னை அவர் தூக்குவதில் எனக்கு இஷ்டமில்லை. ஆனால் நான் ஒன்றும் சொல்லவில்லை என்றோ ஒரு நாள் வருகிறார்கள் ஏன் தேவையில்லாத மனஸ்தாபம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் நாம் இப்படிப்பட்ட விஷயங்களை தாங்கிக் கொள்ளத் தான் வேண்டும். சூழலுக்கு ஏற்றார் போல் நம்மை திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உன்னை ஒன்பது மாதத்தில் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்ற பொழுது என்ன நினைத்தாய்?

உன்னை விட நான் அதிகம் தவித்து போனேன் கண்ணே. எப்பொழுது உன்னைப் பார்ப்பேன் என்று வேலை முடிந்ததும் ஓடி வருவேன். வேலை நேரத்தை தாண்டி அமர மாட்டேன். உனக்கு உணவு ஊட்ட மதிய நேரம் ஒரு முறை வந்து போவேன். இங்கே இன்னொன்றும் கூற வேண்டும் அந்த நேரத்தில் உன்னை அப்பாவும் ஆயாவும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.

அலுவலத்தில் உன்னை நினைத்துக் கொண்டே இருப்பேன். இப்பொழுது விட்டால் நான் மறுபடியும் வேலையில் சேர்வதும் கடினம்.

நான் அம்மாவாக இருப்பதை தாண்டி எனக்கும் ஒரு சுயம் இருக்கின்றது. அதற்காக என் மேல் உனக்கு கோபம் ஒன்றும் இல்லையே.

என்னதான் வேலைக்குச் சென்றாலும் உன்னுடன் இருக்கும்போது என்னுடைய முழுமையை உனக்குத் தருவேன்.

உனக்கு எப்பொழுதெல்லாம் என் துணை வேண்டுமோ அப்பொழுதெல்லாம் உன்னுடன் நிற்பேன் என வாக்களிக்கிறேன் மகளே.

உன்னைத் தோல் அலர்ஜியும் சளி தொந்தரவும் கடந்த இரண்டு வருடங்களில் மிகவும் தொந்தரவு செய்து விட்டன.

எத்தனையோ இரவுகள் உன் சிரமங்களை கண்டு அழுது கொண்டு அமர்ந்திருக்கிறேன். உன் முன்னே அழுதால் நீ மேலும் பயம் கொள்வாய். என்னைக் கண்டு பயமுறுவாய். அதனால் உன் முன்னே தைரியமாய் இருப்பேன். ஆனால் உன் விஷயத்தில் நான் உண்மையில் வலிமையற்றவள்.

எனக்கு என்ன வந்தாலும் பரவாயில்லை உனக்கு ஒன்றும் ஆகக் கூடாது. கமல் மாதிரி சொல்லவேண்டும் என்றால் என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே.

வளர வளர உன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உன் உடல் வலுபெற்றால் உன்னையும் எந்த பிரச்சனையும் நெருங்காது.

அதற்கு நீ நன்றாக சாப்பிட வேண்டும். உனக்கு ஒரு வயது முடியும் வரை நீ எந்த உணவையும் விரும்பி உண்டதே இல்லை.

அலைபேசி காண்பிக்காமல் ஊட்ட வேண்டும் என்பதால் தெரு தெருவாய் உன்னை இடுப்பில் வைத்துக் கொண்டு அலைந்திருக்கிறேன். உனக்கு எந்த உணவும் பிடிக்கவில்லை.

கடந்த சில மாதங்களாய் தான் ஒவ்வொன்றாய் சாப்பிட செய்கிறாய். அதுவும் ஒருநாள் சாப்பிடுவாய் ஒருநாள் அடம் செய்வாய்.

இப்பொழுது நீ பல சேட்டைகள் செய்கிறாய் எங்களை வேலை வாங்கினாலும் பல ரசிக்கும் படி உள்ளது.

நேற்று கூட என்னுடன் உன்னை அமர வைத்து சுண்டலை நசுக்கி உன் கையில் வைக்க ஒவ்வொன்றாய் நீயே சாப்பிட்டாய். இரண்டு மூன்று சாப்பிட்டாய் நான்காவதை எனக்கே ஊட்டி விட்டாய் அந்த நொடி என் கண்களே கலங்கி விட்டதடி.

இதைத்தான் வள்ளுவர்

"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்" என்றாரோ.

உனக்கு வேண்டாம் என்று எனக்கு ஊட்டினாயோ இல்லை என் மேல் பாசத்தில் ஊட்டினாயோ. ஒரு தாயாய் நான் படும் கஷ்டமெல்லாம் இப்படி நீ செய்யும் சின்ன சின்ன செயல்களில் மறந்து பூரித்துப் போகிறேன்.

"ஒரு வயசு முடிஞ்சிருச்சு இன்னும் நடக்கல.. ரெண்டு வயசு ஆகப்போகுது இன்னும் பேசலையா" இப்படி யாராவது கேட்டால் வருத்தமாக இருக்கும்.

நீ பொறுமையாக செய்தாலும் சரியாகத் தான் இருக்கின்றாய் என்று எனக்குத் தெரியும்.

நம்மை பாராட்டுபவர்கள் பலர் இருந்தாலும் இப்படி ஒப்பிட்டுப் பேசுபவர்களும் உண்டு. அதையும் சமாளித்துத்தான் ஆகவேண்டும்.

உனக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு வளர்ந்து வா உன்னுடன் நான் இருக்கிறேன்.

இன்னும் உனக்கு நிறைய சொல்ல வேண்டும் போல் இருக்கின்றது செல்லமே.. அதிகம் பேசிவிட்டாலும் உனக்கு சலித்து விடும் அல்லவா!

மீண்டும் உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். தைரியமான பெண்ணாய் வாழ்க்கையின் அழகைப் புரிந்து பிரச்சனைகளை துணிந்து எதிர்கொண்டு நல் அறிவுடனும் ஆரோக்கியத்துடனும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்.

இப்படிக்கு,

பேரன்புடன்,

உன் அம்மா ரேவதி,

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நான் கண்ட வலிகளை விட நீ கண்ட சவால்களே மிக அதிகம்! - மகளுக்கு அம்மாவின் மடல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பேரன் பேத்திகள் வளரும் வேகத்தை வீடியோ காலில் பார்க்கிறோம்! - பெற்றோரின் வலி| #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அன்னை என்ற ஆலயத்தில் ஆதிபராசக்தியாய் நீ! - அம்மாவிற்கு கடிதம் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என் கேள்விகளுக்கு பதிலுண்டா மகளே? - அம்மாவின் ஆதங்கம் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நான் நடக்க இயலாத போது எனக்கு பறக்க கற்றுத் தந்தவள் நீ அம்மா! - மகனின் வலி | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

உங்கக் கூட தெருகூத்து பார்த்த தருணம்தான் பெஸ்ட்! - மகனின் நினைவில் நிற்கும் அப்பா | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க