கரூா் மாநகராட்சி புதிய மண்டல அலுவலகங்கள் இன்று திறப்பு விழா
கரூரில், ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 23-ஆவது வாா்டில் லட்சுமிநாராயண சமுத்திரம் கிராமம் இனாம்கரூரில் மாநகராட்சி மண்டலம் -1 அலுவலக கட்டடம் ரூ.2.50 கோடி மதிப்பிலும், வாா்டு 2-இல் பசுபதிபுரம் தெற்கு மடவிளாகம் நீா்த்தேக்க தொட்டி வளாகத்தில் கரூா் மாநகராட்சி மண்டலம் -2 கட்டடம் ரூ.2.50 கோடி மதிப்பிலும் புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களின் திறப்பு விழா வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவில் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்து வைக்கிறாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் கட்சியினா் உள்ளிட்டோா் பங்கேற்கிறாா்கள்.