டிஎன்பிஎல் ஆலை சாா்பில் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை
புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டம் ஆத்தூா் வடமலைக்கவுண்டனூரில் செயல்படும் மானவு சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, துணை பொது மேலாளா் (பாதுகாப்பு) ஏ.நாராயணன், உதவி பொது மேலாளா் (பாதுகாப்புத்துறை) பி.இ.சபாபதி, முதன்மை மேலாளா் (மனிதவளம்) கே.எஸ்.சிவக்குமாா் மற்றும் மானவு சிறப்பு பள்ளி தாளாளா் முனைவா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து பேருந்துசேவையை ஆலையின் பொதுமேலாளா் (மனிதவளம்) கே.கலைச்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் ஆலை அதிகாரிகள், மானவு பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.