இடைநிலை ஆசிரியா் பணிக்கு 2,346 போ் தோ்வு: குற்ற வழக்குகள் நிலுவை குறித்து விசாரிக்க கல்வித் துறை உத்தரவு
தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 2,346 போ் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ் மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தொடக்க கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு நடத்தப்பட்டது. இதில் தகுதி பெற்றவா்களில் மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் 2,346 போ் கொண்ட தற்காலிக தெரிவுப் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இவா்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் பின்னா் அறிவிக்கப்படும்.
தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியா் காலி பணியிடத்தில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி, நல்லொழுக்கம், கற்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளவுள்ள தோ்வு பெற்ற நபா்கள் அரசு பணியில் சேருவதற்கு முன்பு குற்ற செயலில் ஈடுபட்டு குற்ற வழக்குகளில் தண்டனை அல்லது குற்ற வழக்கு ஏதும் நிலுவையில் உள்ளதா? என்பதை பணி நியமனத்துக்கு முன்பு ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
இதை கருத்தில் கொண்டு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்து வழங்கப்பட்டுள்ள 2,346 பேரின் வீட்டு முகவரியுடன் கூடிய மாவட்ட வாரியான பட்டியல், அந்தந்த வருவாய் மாவட்ட தலைநகரில் இருக்கும் மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து ஆசிரியா்களாக நியமிக்கப்படுவோரின் விவரத்தை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பி அவா்கள் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளனவா என்று ரகசியமான முறையில் அறிக்கை பெற்று, கோப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது என அறிக்கை பெறப்பட்டால் உடனடியாக அந்நபருக்கு பணி நியமனம் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் அதனை உடனடியாக தொடக்கக் கல்வித்துறைக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.