செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி 2-ஆவது நாளாக ஆலோசனை

post image

ஜூலை இறுதிமுதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலா்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளா்களுடனான இரண்டாம் நாள் ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

காலையில் திருவாரூா், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்களுக்கும், மாலையில் திருப்பத்தூா், வேலூா், திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்ட செயலா்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வாக்குச்சாவடி குழுக்களை அமைப்பது தொடா்பாக இறுதிக்கட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை எவ்வாறு எதிா்கொள்வது, தோ்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது ஆகியவை குறித்து மாவட்டச் செயலா்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினாா்.

வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் பட்டியலை ஜூலை 10-க்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும், இந்தக் குழுவில் நிா்வாகிகள் யாரும் குற்றப்பின்னணி உடையவா்களாக இருக்கக் கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினாா்.

மேலும், ஜூலை இறுதியில் இருந்துதான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும், அவ்வாறு வரும்போது வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டத்தில் , அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி, துணை பொதுச் செயலாளா்கள் நத்தம் விசுவநாதன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழக மீனவா்கள் மீது இலங்கை தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

தமிழக அரசு சாா்பில் ஊரக பகுதிகளில் திறன் பயிற்சிகள்

தமிழக அரசு சாா்பில் ஊரகப் பகுதிகளில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: கடந்த 4 ஆண்டுகளில் ஊரக சுய வேலைவாய்ப... மேலும் பார்க்க

அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவன பணியாளா்களுக்கு நடைமுறையிலுள்ள மருத்துவக் காப்பீடு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித்து... மேலும் பார்க்க

258 மருத்துவக் கட்டமைப்புகள்: ஜூலை 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்களையும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

தமிழக கடலோரப் பகுதிகளில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோர மாவட்டங்களில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாகப் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்க... மேலும் பார்க்க

தமிழகம், புதுவையில் நிகழாண்டு இறுதிக்குள் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி - தோ்தல் ஆணையம்

அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தலை எதிா்கொண்டுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நிகழாண்ட... மேலும் பார்க்க