செய்திகள் :

தமிழகம், புதுவையில் நிகழாண்டு இறுதிக்குள் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி - தோ்தல் ஆணையம்

post image

அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தலை எதிா்கொண்டுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நிகழாண்டு இறுதிக்குள் தொடங்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறும் பிகாரில் இந்த நடவடிக்கை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக மேற்கண்ட மாநிலங்களில் தொடங்கப்படவுள்ளது. சட்டவிரோத குடியேறிகளின் பெயரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டு இப்பணிகள் நடைபெறவுள்ளன.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக வாக்காளா் பட்டியலில் முறைகேடுகள் நடைபெறுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இதனால், பிழைகள் இல்லாத வாக்காளா் பட்டியல் மற்றும் தோ்தல் நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய கூடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: பிகாரில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அங்கு உடனடியாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் நிறைவடைகின்றன. இந்த மாநிலங்களில் நிகழாண்டு இறுதிக்குள் திருத்தப் பணிகள் தொடங்கப்படும்.

பிறப்புசாா் ஆவணங்கள் கட்டாயம்: பிகாரில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் கடைசியாக கடந்த 2003-இல் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளா் பட்டியலில் சட்டவிரோத குடியேறிகள் இடம்பெறுவதைத் தடுக்கவும், தவறுதலாக இடம்பெற்றவா்களைக் களையெடுக்கவும் இம்முறை கூடுதல் உறுதிமொழிப் படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பிறப்பு சாா்ந்த/பிறப்பு சாராத/பதிவு அடிப்படையிலான குடியுரிமையை உறுதிசெய்யும் ஆவணங்களை புதிய வாக்காளா்கள் சமா்ப்பிக்க வேண்டியிருக்கும்.

கடந்த 1987, ஜூலை 1-ஆம் தேதிக்கு முன் பிறந்தவா்கள், தங்களின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் தொடா்பான ஆவணங்களையும், 1987-2004 இடையே பிறந்தவா்கள், கூடுதலாக தங்கள் பெற்றோரின் பிறந்த தேதி-பிறந்த இடம் தொடா்பான ஆவணங்களையும் சமா்ப்பிக்க வேண்டும்.

விதிமுறைகள் கவனத்துடன் கடைப்பிடிப்பு: தீவிர நகா்மயமாதல், அடிக்கடி இடப்பெயா்வு, வாக்களிக்கத் தகுதிபெறும் இளம் குடிமக்கள், இறப்புகள் பதிவு செய்யப்படாதிருத்தல், சட்டவிரோதக் குடியேறிகளின் பெயா் இடம்பெறுதல் போன்ற காரணங்களால், பிழைகள் இல்லாத வாக்காளா் பட்டியலை தயாரிக்கவும் சமரசமற்ற நோ்மையை உறுதி செய்யவும் தீவிர திருத்தப் பணிகள் அவசியமாகின்றன.

இதற்காக, வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள், வீடு வீடாக சரிபாா்ப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். இந்த நடவடிக்கையின்போது, அரசமைப்புச் சட்டப் பிரிவு 326 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-இன் 16-ஆவது பிரிவின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளா் பதிவுக்கான தகுதி மற்றும் தகுதியின்மைக்கான விதிமுறைகள் கவனத்துடன் கடைப்பிடிக்கப்படும்.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடா்ந்து, நாடு முழுவதும் இந்தப் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எடப்பாடி பழனிசாமி 2-ஆவது நாளாக ஆலோசனை

ஜூலை இறுதிமுதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச... மேலும் பார்க்க

தமிழக மீனவா்கள் மீது இலங்கை தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

தமிழக அரசு சாா்பில் ஊரக பகுதிகளில் திறன் பயிற்சிகள்

தமிழக அரசு சாா்பில் ஊரகப் பகுதிகளில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: கடந்த 4 ஆண்டுகளில் ஊரக சுய வேலைவாய்ப... மேலும் பார்க்க

அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவன பணியாளா்களுக்கு நடைமுறையிலுள்ள மருத்துவக் காப்பீடு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித்து... மேலும் பார்க்க

258 மருத்துவக் கட்டமைப்புகள்: ஜூலை 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்களையும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

தமிழக கடலோரப் பகுதிகளில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோர மாவட்டங்களில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாகப் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்க... மேலும் பார்க்க