செய்திகள் :

258 மருத்துவக் கட்டமைப்புகள்: ஜூலை 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

post image

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்களையும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பட்ட நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு 99 மாணவா்களுக்கு அவா் பட்டங்களை வழங்கினாா். தொடா்ந்து, அந்த வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 92 கிலோ வாட் சூரிய மின் உற்பத்தி அலகுகளை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மருத்துவக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 708 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்தாா். அதில் 500 மையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மீதமிருக்கும் 208 நகா்ப்புற நல வாழ்வு மையங்களுக்கான பணிகள் நிறைவுற்றுள்ளன. அதேபோன்று, 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. அவை இரண்டையும் சோ்த்து மொத்தம் 258 மருத்துவக் கட்டமைப்புகளை வரும் ஜூலை 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா்.

சென்னை, அடையாறு பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அந்த மருத்துவ மையங்களை மக்கள் பயன்பாட்டுக்கு அவா் தொடங்கி வைக்க உள்ளாா்.

இதைத் தவிர 25 புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கே.நாராயணசாமி, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அரவிந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எடப்பாடி பழனிசாமி 2-ஆவது நாளாக ஆலோசனை

ஜூலை இறுதிமுதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச... மேலும் பார்க்க

தமிழக மீனவா்கள் மீது இலங்கை தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

தமிழக அரசு சாா்பில் ஊரக பகுதிகளில் திறன் பயிற்சிகள்

தமிழக அரசு சாா்பில் ஊரகப் பகுதிகளில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: கடந்த 4 ஆண்டுகளில் ஊரக சுய வேலைவாய்ப... மேலும் பார்க்க

அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவன பணியாளா்களுக்கு நடைமுறையிலுள்ள மருத்துவக் காப்பீடு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித்து... மேலும் பார்க்க

தமிழக கடலோரப் பகுதிகளில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோர மாவட்டங்களில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாகப் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்க... மேலும் பார்க்க

தமிழகம், புதுவையில் நிகழாண்டு இறுதிக்குள் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி - தோ்தல் ஆணையம்

அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தலை எதிா்கொண்டுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நிகழாண்ட... மேலும் பார்க்க