செய்திகள் :

மெக்சிகோ: துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி

post image

மெக்சிகோ: மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் நடைபெற்ற கிறிஸ்துவ மத நிகழ்ச்சியின் போது கூட்டத்தினர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர்.

மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணம் இரபுவாடோ நகரில் கிறிஸ்தவ மத நிகழ்ச்சியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் புனித யோவான் பாப்டிஸ்டைக் கொண்டாடும் விதமாக மது அருந்திக் கொண்டு தெருவில் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, துப்பாக்கிகளுடன் கூட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், 12 பேர் பலியானர், 20 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க கூட்டத்தினர் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் தப்பியோடினர். இதுகுறித்த சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் விடியோக்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்திற்கு வருத்தம், கண்டனம் தெரிவித்துள்ள மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறியுள்ளார்.

கடந்த மாதம், குவானாஜுவாடோவின் சான் பார்தோலோ டி பெர்ரியாஸ் நகரில் கத்தோலிக்க திருச்சபை ஏற்பாடு செய்திருந்து விருந்து நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் பலியாகினர்.

மெக்சிகோ நகரத்தின் வடமேற்கே அமைந்துள்ள குவான்ஜுவாடோ, நாட்டின் மிகவும் வன்முறை நிறைந்த மாகாணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மெக்சிகோ மாகாணத்தில் மட்டும் 1,435 கொலைகள் நடந்துள்ளன, இது பிற மாகாணங்களில் நடந்துள்ள கொலைகளை விட இரண்டு மடங்கு அதிகம்.

சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைய 28 மணிநேரம் - டிக்.. டிக்.. நிமிஷங்கள்!

திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை, 2 பேர் காயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் காந்தி நகர் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவில் 3 பேர் மீது நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயங்களுடன் திருவள்ளூர் மாவட்ட ... மேலும் பார்க்க

திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?: இபிஎஸ் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அதிமுக நிர்வாகி முத்து பாலகிருஷ்ணனை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ள அதிமுக ப... மேலும் பார்க்க

நடுக்கடலில் மீனுடன் சேர்ந்த மடிவலை மார்பில் விழுந்ததில் மீனவர் பலி

நாகை: நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, மீனுடன் சேர்ந்த மடிவலை மார்பில் விழுந்ததில் நாகை மீனவர் பலியானார்.நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கீச்ச... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்தில் 35 ட்ரோன்கள் பறிமுதல்: சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

கோவை : சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 35 ட்ரோன்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பயணிகள் இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை பீளமேடு சர்வதேச விமான... மேலும் பார்க்க

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வியாழக்கிழமை காலை(ஜூன் 26) வினாடிக்கு 13,332 கன அடியாக அதிகரித்துள்ளது.தென்மேற்கு பருவ மழையானது கர்நாடக மாநிலத்தில் காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 34,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து 60,000 கனஅடி உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 34,000 கனஅடியாக அதிகரித்துள்... மேலும் பார்க்க