செய்திகள் :

Kovai Rain: விடாது பெய்யும் மழை; கோவையில் நிரம்பும் அணைகள்.. வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை

post image

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்தது.

கோவை மழை

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று கோவை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. வால்பாறை சுற்றுவட்டாரங்களின் தொடர்ந்து கனமழை பெய்கிறது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, அதிகபட்சமாக சோலையாறு பகுதியில் 175 மி.மீ மழையும்,  சின்னகல்லாறு பகுதியில் 119 மி.மீ மழையும், சின்கோனா பகுதியில் 117 மி.மீ மழையும் பெய்துள்ளது. வால்பாறை தாலுகாவில் 91 மி.மீ, பொள்ளாச்சியில் 68 மி.மீ, சிறுவாணி அடிவாரத்தில் 60 மி.மீ மழை பெய்துள்ளது.

வால்பாறை

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறை வட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் அறிவித்துள்ளார்.

கோவை மாநகர் பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகள் மோசமாகி வருகிறது. உப்பிலிபாளையம் அருகே நேற்று திடீரென சாலையில் பள்ளம் உருவானது. எனவே மக்கள் கவனமாக பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பில்லூர் அணை

மழை காரணமாக சிறுவாணி, பில்லூர் அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்துள்ளது. பில்லூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டியது. இந்தாண்டில் மட்டுமே பில்லூர் அணை 3-வது முறையாக நிரம்பியுள்ளது.

நீலகிரி கனமழை: வாகனங்கள் மீது விழுந்த மரங்கள், சுற்றுலாத் தலங்கள் தொடர்ந்து மூடல்.. நிலவரம் என்ன?

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்திருக்கிறது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி, பார... மேலும் பார்க்க

கேரளாவில் அதி தீவிர மழை; ஒரே நாளில் 4 பேர் பலி, 2 பேர் மாயம்.. 11 மாவட்டங்களுக்கு விடுமுறை!

கேரள மாநிலத்தில் கடந்தமாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடந்து கேரளா முழுவதும் மழை பெய்துவருகிறது. கர்நாடகா, ஆந்திரா, ஒடிஷா கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த சுழற்சி மண்டலம் காரணமாக... மேலும் பார்க்க

ஊட்டியில் மீண்டும் கனமழை, அடுத்தடுத்து விழும் மரங்கள்.. பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியில் கனமழை பெய்தது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு வாரம் பெய்த அந்த தொடர் கனமழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது.ச... மேலும் பார்க்க

Ooty : நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை, நிரம்பும் நீர்நிலைகள்!

தென்னகத்தின் தண்ணீர் தொட்டி என வர்ணிக்கப்படும் நீலகிரியில் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கி தற்போதைய புதிய திட்டங்கள் வரை பல்வேறு அணைக்கட்டுகளைத் தொடர்ந்து கட்டி வருகின்றனர். நீலகிரி மட்டுமன்றி சமவெளி பகு... மேலும் பார்க்க

நீலகிரி: நகரும் ராட்சத பாறைகள்; நிலச்சரிவு அபாயம்; போக்குவரத்துக்குத் தடை - கலெக்டர் சொல்வதென்ன?

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாள்களாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களில் அதிதீவிர கனமழை இருக்கும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்க... மேலும் பார்க்க