செய்திகள் :

குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!

post image

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, டிராகன் விண்கலத்தில் இருந்து உரையாற்றியுள்ளார்.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் புதன்கிழமை விண்ணுக்கு அனுப்பப்பட்டார்.

அவருடன் 3 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாள்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு அவர்கள் சென்ற விண்கலன் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையவுள்ள நிலையில், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு உரையாற்றியுள்ளனர்.

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, விண்ணிலிருந்து அனைவருக்கும் வணக்கத்தை (நமஸ்காரம்) தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.

”அற்புதமான பயணமாக இருக்கிறது. இங்குள்ள பூஜ்ஜிய ஈர்ப்பு விசைக்குப் பழகிக் கொண்டிருக்கிறேம். ஒரு குழந்தையைப் போல நடப்பதற்கு, நகர்வதற்கு போன்றவையைக் கற்றுக் கொண்டுள்ளேன். ஒவ்வொரு தருணத்தையும் மிகவும் ரசித்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், பூமியில் இருந்து 418 கி.மீ. தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கும் விண்கலனின் கண்ணாடி வழியாக பூமியைக் காட்டினார்.

முன்னதாக பூமியில் இருந்து புறப்பட்ட 10 நிமிடங்களில் பேசிய சுபான்ஷு சுக்லா, ”இது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு எனது பயணத்தின் தொடக்கம் மட்டுமல்ல, இந்தியாவின் மனித விண்வெளிப் பயண சகாப்தத்தின் தொடக்கமும் கூட” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Summary

Indian astronaut Subhanshu Shukla, who is on a trip to the International Space Station, spoke from the Dragon spacecraft.

இதையும் படிக்க : தோளில் மூவர்ணக் கொடி; சகாப்தத்தின் தொடக்கம்: விண்ணிலிருந்து சுபான்ஷு சுக்லா

அகமதாபாத் விமான விபத்து: கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.குஜராத் மாநிலம்... மேலும் பார்க்க

ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்! - மத்திய அமைச்சர் அமித் ஷா

ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.மத்திய அரசின் அலுவல் மொழித் துறையின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்... மேலும் பார்க்க

பாராசிட்டமால் 650 வகை மாத்திரைக்கு கர்நாடக அரசு தடை!

பாராசிட்டமால் 650 வகை உள்பட 14 மாத்திரை, மருந்துகளுக்கு தடை விதித்து கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று, கடந்த மே மா... மேலும் பார்க்க

சிபு சோரனை சந்தித்து நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர் முர்மு!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 81 வயதாகும் சிபு சோரன், கடந்த சில நாள்களு... மேலும் பார்க்க

அம்புபாச்சி மேளா: 4 நாள்களுக்குப் பிறகு காமாக்யா கோயில் நடை திறப்பு!

அஸ்ஸாமின் குவாகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் அம்புபாச்சி மேளா நிறைவையொட்டி காமாக்யா கோயில் நடை பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது ஸ்ரீ காமக்யா ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல் தகவலைத் தாருங்கள்; விவாதிக்கத் தயார்! காங்கிரஸ் அறிவிப்பு

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு விடியோ உள்ளிட்டவைக் கொடுத்தால், தேர்தல் ஆணையத்துடன் விவாதத்துக்குத் தயார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு நடைப... மேலும் பார்க்க