செய்திகள் :

நான் தப்பு பண்ணிருந்தாலும், அப்பா கேட்குற முதல் கேள்வி, ‘சாப்டியாம்மா?’ - மகளின் கண்ணீர்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அப்பா!

இந்த சொல் என் மனசுல ஆழமா பதிஞ்ச சொல். எப்பவுமே எனக்கும் அப்பாவுக்கும் ரொம்ப நல்ல மகிழ்வான சந்தர்ப்பங்கள் இருந்தது இல்ல. நிறைய சண்டைதான் போட்டுருக்கோம். ஆனா எனக்கு அவர ரொம்ப பிடிக்கும். உலகிலேயே தலைசிறந்த அப்பா அவர்தான்!

ரெண்டும் பொண்ணுனு எங்க அப்பாவ எப்போதும் சொந்தங்கள் எல்லாம் கொஞ்சம் மட்டம் தட்டி இருக்காங்க. ஆனா அவர் ஒருநாளும் பையன் இல்லன்னு வருத்தப்பட்டு நான் பாத்ததே இல்ல.

பெண்களை எதுக்கு இவ்வளவு செலவு பண்ணி கான்வெண்ட் ல படிக்க வைக்கிற ? எதுக்கு இன்ஜினியரிங் படிக்க வைக்கிற? எதுக்கு இவ்வளவு நகை போட்ற? — அப்பப்பா எவ்வளவு கேள்விகளை அவர் எதிர்கொண்டிருக்கிறார்.

ஆனா எதையும் பொருட்படுத்தாமல் , என்னையும் என் தங்கையையும் படிக்க வைத்தார், நல்லபடியா கல்யாணம் செஞ்சு கொடுத்தார். நல்லா படி, வேலைக்குப் போ, வீட்டுல இருக்காத...இதை அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு!

காலேஜ்ல நான் ஒரு முறை ஒரு தப்பு செஞ்சப்போ என்ன தனியா உட்கார வச்சு அப்பாவுக்கு போன் பண்ணி வர சொல்லிட்டாங்க. அப்படி ஒரு பயம். நாலு மணி நேரம் அப்புறம் அவர் வந்தார். அவரைப் பார்த்ததும் தைரியம் தானா எனக்கு வந்துச்சு. என்ன பிரச்சனை எதுவும் கேட்கல, சாப்டியானு தான் முதல்ல கேட்டார். என்னைக்கும் மறக்க மாட்டேன்.

ஒரு நாள் ரொம்ப டிப்ரஸா அழுந்தப்போ, 'சாமி, எதற்கும் அழக்கூடாது, நான் இருக்கேன்னு' சொன்னப்போ — மனசு உடனே லேசாயிடுச்சு, அவ்வளவு ஒரு ஆறுதலா இருந்துச்சு.

சின்ன வயசுல இருந்தே நானோ அவரோ அன்ப வெளிப்படுத்துனது இல்ல. ஆனா எப்பவும் நாங்க நல்லா இருக்கணும்னு ஓடிட்டு இருந்த மனிதன் அவர்தான்!

எவ்வளவோ தடவை அவரைத் ரொம்ப கோவமா பேசி இருக்கேன், சண்டை போட்டிருக்கேன். ஆனா ஒருநாளும் அவர் எனக்குச் செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டது இல்லை.

நான் முதல்முதலா சாலரி வாங்கி ஒரு வாட்ச் வாங்கி கொடுத்தேன், அப்புறம் அவர் பிறந்த நாளுக்கு ஒரு ஃபோன் வாங்கி கொடுத்தேன். அவ்வளவு பெருமையா அதை யூஸ் பண்ணினாரு.

திடீர்னு அவர்கு உடம்புக்கு முடியாம, டாக்டருக்கு போனா ஹெல்த் ரொம்ப மோசமா இருக்குனு சொன்னாங்க. ரெண்டு மாசத்துல ரொம்ப முடியாம திடீர்னு ஒரு நாள் எங்களை விட்டுட்டு போயிட்டார்.

அவர் போனதுக்கு பிறகு அவரை நினைச்சு அழாத நாள் இல்ல. அவருக்கு ஒன்றும் செய்யாம விட்டுட்டோம்னு ரொம்ப குற்ற உணர்ச்சியில அழுதிருக்கேன்.

என் கடைசி நாள் வரைக்கும் அவருடைய நினைவுகள் கண்டிப்பா இருக்கும். பொதுவா 'அடுத்த ஜென்மம் வேண்டாம் னு தான் எல்லாரும் சொல்வாங்க.

ஆனா எனக்கு அடுத்த ஜென்மம் நிச்சயமா இருக்கணும். அந்த ஜென்மத்துலேயும் அவருக்கு பொண்ணா பொறக்கணும். வாழும் போதே என் அன்பை எல்லாம் கொட்டி கொடுக்கணும்.

அப்பா, நீங்க இன்னும் இங்க தான் எங்கேயோ இருக்கீங்க, எப்பவுமே எங்களை பார்த்துட்டே இருக்கீங்கனு எனக்கு தெரியும்...

உங்க பொண்ணா பொறந்ததுக்கு நான் கண்டிப்பா புண்ணியம் பண்ணி இருக்கணும். எப்போதும் நான் உங்க பெருமையை காப்பாத்துவேன். உங்களை திரும்ப சந்திக்கும் வரை உங்கள் நினைவோட ஓடிட்டே இருப்பேன்!!!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sri Aurobindo: 'கடவுளும் ரோஜாவும்...' - ஸ்ரீ அரவிந்தர் | கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 17

தத்துவ ஞானி, யோகி, குரு, கவிஞர் எனப் பன்முகங்கள் கொண்ட அரவிந்தர் எப்போது எனக்கு அறிமுகமானாரென்று சரியாக நினைவுக்கு வரவில்லை. பள்ளியில் படிக்கும்போது பேச்சுவாக்கில் வந்தவரென நினைக்கிறேன். மூட்டமான கவித... மேலும் பார்க்க

மகளுக்காக வேலையை விட்ட அம்மாவின் மனப் போராட்டமும் மகிழ்வும்! - உணர்வுப் பூர்வ கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கடனை அடைக்க வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் தந்தையின் வலி! - மகளுக்கு ஒரு மடல் #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஒருநாள் முழுக்க நீயும் நானும் மட்டும் நிறைய பேசனும் அப்பா! - மகனின் அன்பு வேண்டுகோள் #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சேற்று வரப்பை முத்தமிட்ட உங்கள் பாதத்திற்கு ஓய்வு கொடுக்க முடியலை - மகனின் கண்ணீர் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தண்டனை தராமல் திருத்தும் புதுமை ஆசான் நீங்கள்! - அப்பாவிற்கு மகளின் பரிசு #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க