செய்திகள் :

உத்தரகாண்ட்: மலையிலிருந்து தவறி ஆற்றில் விழுந்த பஸ்; 10 பேர் மாயம், 3 பேர் உயிரிழப்பு!

post image

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலையில் ஏராளமான கோயில்கள் இருக்கிறது. இக்கோயில்களுக்கு தினமும் வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்ற வண்ணம் இருக்கின்றனர். மலைப்பாதை மிகவும் குறுகலாகவும், வளைவுகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. இதனால் இச்சாலையில் செல்வது மிகவும் அபாயகரமான ஒன்றாகும். இன்று ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரிலிருந்து 18 பயணிகளுடன் பஸ் ஒன்று உத்தரகாண்டில் உள்ள சர்தாம் யாத்திரைக்குச் சென்று கொண்டிருந்தது. பஸ் மலை உயரத்தில் குறுகலான சாலையில் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள ருத்ரபிரயக் என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கீழே பள்ளத்தில் விழுந்தது. கீழே சென்று கொண்டிருந்த அலக்நந்தா ஆற்றுக்குள் பஸ் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து கேள்விப்பட்டதும் போலீஸாரும், பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர். 7 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தவிர 10 பேரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருவதாக பேரிடர் மீட்பு படை அதிகாரி வினோத் குமார் தெரிவித்தார். பஸ்சில் நடத்துனர், ஓட்டுநருடன் சேர்த்து மொத்தம் 20 பேர் இருந்தனர். காயம் அடைந்தவர்களில் 9 வயதுடைய இரண்டு குழந்தைகளும் அடங்கும். பத்ரினாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது நடந்த இந்த விபத்தில் சிக்கிய பஸ்சில் மகாராஷ்டிராவை சேர்ந்த இரண்டு பேரும், ராஜஸ்தானை சேர்ந்த 7 பேரும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பேரும், குஜராத்தை சேர்ந்த 7 பேரும் இருந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் ரிஷிகேசில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

18 சீட் கொண்ட டெம்போ டிராவலர் பஸ் அலக்நந்தா ஆற்றில் விழுந்து விட்டதாகவும், மீட்பு பணியில் நிர்வாகமும், போலீஸாரும், பேரிடர் மீட்புப் படையும் ஈடுபட்டுள்ளதாக கர்வால் டிவிஷனல் கமிஷனர் வினய் சங்கர் தெரிவித்தார்.

நெல்லை: மீட்புப் பணியில் காவலர் மரணம்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு; நிவாரணம் அறிவித்த முதல்வர்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வி.கோவில்பத்து செங்கல்சூலையில் பணிபுரியும் செய்யதுங்கநல்லூர் மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 18ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்குத் தனது இருசக்கர வா... மேலும் பார்க்க

மும்பை புறநகர் ரயிலில் தொங்கியபடி பயணம்; அதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை; தானியங்கி கதவு எப்போது?

மும்பையில் புறநகர் ரயில் மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுவிட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிவிடும். எனவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, மும்பை ரயில்வே-க்... மேலும் பார்க்க

தென்காசி: கழன்று ஓடிய அரசுப் பேருந்து சக்கரங்கள்; மருத்துவமனையில் 3 மாணவர்கள்; அரசு சொல்வது என்ன?

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற இடத்தில், 87 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தின், பின்புற ஆக்சில் உடைந்ததில், சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயங்களுடன்... மேலும் பார்க்க

``ஜூலை பாதி வரை நிறுத்தி வைக்கிறோம்..'' - விமான விபத்தையடுத்து ஏர் இந்தியா அதிரடி முடிவு!

குஜராத் அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 171 விமானம் கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு கிளம்பியது. கிளம்பிய கிட்டத்தட்ட 5 நிமிடங்களிலேயே, அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க

Plane Crash: அகமதாபாத் விமான விபத்து; கருப்பு பெட்டிகள் ஆய்வுக்காக அமெரிக்கா செல்கிறதா?

சேதம் அடைந்த கருப்பு பெட்டிகள்கடந்த ஜூன் 12-ம் தேதி, மதியம் 1:38-க்கு அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய விமானம் சுமார் 1:43 மணியளவில் விபத்தில் சிக்கியது. அந்த போயிங் 171 விமானத்தில் பயணித்த 2... மேலும் பார்க்க

திருச்சி: அரசு பேருந்தும், அரசு வாகனமும் மோதி விபத்து; பரிதாபமாக உயிரிழந்த முசிறி ஆர்டிஓ

மதுரையைப் பூர்வீகமாக கொண்ட ஆரமுத தேவசேனா (வயது: 52), திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்தார்.இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை... மேலும் பார்க்க