செய்திகள் :

நீலகிரி: நகரும் ராட்சத பாறைகள்; நிலச்சரிவு அபாயம்; போக்குவரத்துக்குத் தடை - கலெக்டர் சொல்வதென்ன?

post image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாள்களாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களில் அதிதீவிர கனமழை இருக்கும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊட்டியில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு, "‌ அடுத்த இரண்டு நாள்கள் நீலகிரி மாவட்டத்திற்கு மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மரங்கள் விழும் அபாயமும் உள்ளது.

ஊட்டி -கூடலூர் சாலை

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் நடுவட்டம் அருகே ஆகாச பாலம் - தவளை மலை இடையே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள மூன்று ராட்சத பாறைகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் இவ்வழித்தடத்தில் வாகனங்கள் சென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இச்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகள்‌ பகல் நேரங்களில் மட்டும் இயக்கப்பட உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படும். அவசர தேவைகளுக்கு செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை வாகனங்கள் மட்டும் பாதுகாப்புடன் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் உள்ளூர் வாகனங்கள் போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் அனுமதிக்கப்படும். அடுத்த இரு நாள்கள் கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன.

ஊட்டி -கூடலூர் சாலை

அடுத்த இரு நாள்கள் கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம். பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். ஊட்டி - கூடலூர் சாலையில், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதியில் ஆர்.டி.ஓ தலைமையில் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரிடர் மேலாண்மை குழுவினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் அங்கு பணியில் உள்ளனர். நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி.பி வாகனங்களை வைத்து நிலச்சரிவு ஏற்பட்டால் உடனுக்குடன் அகற்ற தயார் நிலையில் உள்ளனர்.

இது அனைத்துமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மழை பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால், பொதுமக்கள் உடனுக்குடன் 1077 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் அண்டை மாநிலங்களில் உள்ள கலெக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க அறிவுரை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி -கூடலூர் சாலை

அதேபோல் அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களிலும் இது குறித்து தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கூடலூர், கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தற்போதைக்கு முதுமலை, மசினகுடி சாலையில் ஊட்டி வர பயன்படுத்தலாம். மேலும் ஏற்கனவே, ஊட்டி - கூடலூர் வழித்தடத்தில் உள்ள ஃபைன் பாரஸ்ட், பைக்காரா, சூட்டிங் மட்டம் ஆகிய சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அடுத்த இரு நாள்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் " கூறியுள்ளார்.

Rain update: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு?

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று தென் மண்டல இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தகவல் இதோ...கோவை மற்ற... மேலும் பார்க்க

Rain: வயநாடு நிலச்சரிவு பகுதியில் கரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்... மிரட்சியில் மக்கள்!

முன்கூட்டியே தொடங்கிய‌ தென்மேற்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பாலான‌ இடங்களில் கடந்த 3நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல பகுதிகளிலும் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை வ... மேலும் பார்க்க

Rain Alert: "நீலகிரி உட்பட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்" - வானிலை அறிக்கை

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கோடை மழை தீவிரமடைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது.குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் அணைகள்... மேலும் பார்க்க

அவலாஞ்சி 353 மி.மீ, அப்பர் பவானி 298 மி.மீ - பேரிடருக்காக முதல் முறையாக மூடப்பட்ட தாவரவியல் பூங்கா

நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை இன்றும் விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக இன்றும் காற்றுடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாவட்டம் முழுவ... மேலும் பார்க்க

Rain Alert: "'இந்த' மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை" - வானிலை மையம் சொல்வது என்ன?

'இது வெயில் காலமா... மழைக் காலமா?' என்று குழப்புவது போல, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களின் மே மாதத்தைக் குளிர்வித்து வருகிறது கோடை மழை.இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதைத் தெரிவித்... மேலும் பார்க்க