செய்திகள் :

அவலாஞ்சி 353 மி.மீ, அப்பர் பவானி 298 மி.மீ - பேரிடருக்காக முதல் முறையாக மூடப்பட்ட தாவரவியல் பூங்கா

post image

நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை இன்றும் விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக இன்றும் காற்றுடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பரவலாக 2,599.60 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு

அவலாஞ்சியில் 353 மில்லிமீட்டர்

அதிகபட்சமாக அவலாஞ்சியில் 353 மில்லிமீட்டர் மழையும் அதற்கு அடுத்தபடியாக அப்பர் பவானியில் 298 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அவலாஞ்சி பகுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் நீர்நிலைகள் அதிவேகத்தில் நிரம்பி வருகின்றன. முத்தோரை பாலாடா சுற்றுவட்டாரப்‌ பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பீட்ரூட், கேரட், பூண்டு பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிக மூடல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொட்டபெட்டா காட்சி முனை உள்ளிட்ட ஒருசில சுற்றுலாத்தலங்கள் ஏற்கனவே மூடப்பட்டிருந்தாலும், 8 வது மைல் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கேரளாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தற்போது அறிவித்திருக்திறது.

மூடப்பட்ட அரசு தாவரவியல் பூங்கா

நீலகிரி மழை பேரிடர் வரலாற்றில் முதல் முறையாக அரசு தாவரவியல் பூங்கா மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கரையோர பகுதிகளில் மக்கள் நடமாட வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர். ஆங்காங்கே சாலைகளில் பெயர்ந்து விழும் மரங்களை அவ்வப்போது அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி: நகரும் ராட்சத பாறைகள்; நிலச்சரிவு அபாயம்; போக்குவரத்துக்குத் தடை - கலெக்டர் சொல்வதென்ன?

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாள்களாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களில் அதிதீவிர கனமழை இருக்கும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்க... மேலும் பார்க்க

Rain update: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு?

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று தென் மண்டல இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தகவல் இதோ...கோவை மற்ற... மேலும் பார்க்க

Rain: வயநாடு நிலச்சரிவு பகுதியில் கரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்... மிரட்சியில் மக்கள்!

முன்கூட்டியே தொடங்கிய‌ தென்மேற்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பாலான‌ இடங்களில் கடந்த 3நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல பகுதிகளிலும் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை வ... மேலும் பார்க்க

Rain Alert: "நீலகிரி உட்பட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்" - வானிலை அறிக்கை

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கோடை மழை தீவிரமடைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது.குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் அணைகள்... மேலும் பார்க்க

Rain Alert: "'இந்த' மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை" - வானிலை மையம் சொல்வது என்ன?

'இது வெயில் காலமா... மழைக் காலமா?' என்று குழப்புவது போல, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களின் மே மாதத்தைக் குளிர்வித்து வருகிறது கோடை மழை.இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதைத் தெரிவித்... மேலும் பார்க்க

`ரெட் அலர்ட், ஒரே நாளில் 2 பக்தர்கள் உயிரிழப்பு..' - வெள்ளியங்கிரி மலை ஏற தடை விதித்த வனத்துறை

தமிழ்நாட்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவ... மேலும் பார்க்க