செய்திகள் :

Rain Alert: "நீலகிரி உட்பட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்" - வானிலை அறிக்கை

post image

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கோடை மழை தீவிரமடைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது.

குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், அங்கு குறிப்பிட்ட பகுதிகளில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆங்காங்கே சாலைகளில் விழுந்த ராட்சத மரங்களை அகற்றும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்திருக்கிறது.

இது குறித்து வானிலை அறிக்கையில், "நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மட்டும் காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்." என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நீலகிரி: நகரும் ராட்சத பாறைகள்; நிலச்சரிவு அபாயம்; போக்குவரத்துக்குத் தடை - கலெக்டர் சொல்வதென்ன?

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாள்களாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களில் அதிதீவிர கனமழை இருக்கும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்க... மேலும் பார்க்க

Rain update: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு?

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று தென் மண்டல இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தகவல் இதோ...கோவை மற்ற... மேலும் பார்க்க

Rain: வயநாடு நிலச்சரிவு பகுதியில் கரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்... மிரட்சியில் மக்கள்!

முன்கூட்டியே தொடங்கிய‌ தென்மேற்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பாலான‌ இடங்களில் கடந்த 3நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல பகுதிகளிலும் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை வ... மேலும் பார்க்க

அவலாஞ்சி 353 மி.மீ, அப்பர் பவானி 298 மி.மீ - பேரிடருக்காக முதல் முறையாக மூடப்பட்ட தாவரவியல் பூங்கா

நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை இன்றும் விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக இன்றும் காற்றுடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாவட்டம் முழுவ... மேலும் பார்க்க

Rain Alert: "'இந்த' மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை" - வானிலை மையம் சொல்வது என்ன?

'இது வெயில் காலமா... மழைக் காலமா?' என்று குழப்புவது போல, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களின் மே மாதத்தைக் குளிர்வித்து வருகிறது கோடை மழை.இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதைத் தெரிவித்... மேலும் பார்க்க

`ரெட் அலர்ட், ஒரே நாளில் 2 பக்தர்கள் உயிரிழப்பு..' - வெள்ளியங்கிரி மலை ஏற தடை விதித்த வனத்துறை

தமிழ்நாட்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவ... மேலும் பார்க்க