செய்திகள் :

Rain: வயநாடு நிலச்சரிவு பகுதியில் கரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்... மிரட்சியில் மக்கள்!

post image

முன்கூட்டியே தொடங்கிய‌ தென்மேற்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பாலான‌ இடங்களில் கடந்த 3

நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல பகுதிகளிலும் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கும் இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

வயநாடு வெள்ளம்

குறிப்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30 - தேதி இரவு ஏற்பட்ட கொடிய நிலச்சரிவால் சிதைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணுக்குள் புதையுண்ட புஞ்சிரி மட்டம், சூரல்மலை, முண்டகை பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக இடைவிடாத தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக இந்த பகுதிகளில் காட்டாற்று வெள்ளமென மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

புஞ்சிரிமட்டம் பகுதியில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவிற்கு கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்ட கோரமான பிரமாண்ட நீர்வழி தடத்தில் இதுவரை லேசான நீரோட்டம் இருந்து வந்த நிலையில், இந்த மழையால் தற்போது கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. முண்டகை ஆற்றின் குறுக்கே ராணுவம் அமைத்துக் கொடுத்த தற்காலிக பாலமான‌ பெய்லி பாலம் அதிரும் வகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதை உள்ளுர் மக்கள் மிரட்சியுடன் பார்த்து வருகின்றனர்.

வயநாடு வெள்ளம்

இது குறித்து தெரிவித்த உள்ளூர் மக்கள், "தற்போது நிலவி வரும் இடைவிடாத மழையும் காற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட கொடிய பேரழிவு நாளை நினைவுபடுத்துகிறது. நிலச்சரிவின் சாட்சியாக சிதைந்த நிலையில் நிற்கும் வீடுகளுக்கு ஊடாக பாய்ந்தோடும் வெள்ளம் விவரிக்க முடியாத அளவிற்கு பயத்தை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பான பகுதிகளில் அரசு உதவியுடன் தங்கி வருகிறோம்" என்றனர்.

நீலகிரி: நகரும் ராட்சத பாறைகள்; நிலச்சரிவு அபாயம்; போக்குவரத்துக்குத் தடை - கலெக்டர் சொல்வதென்ன?

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாள்களாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களில் அதிதீவிர கனமழை இருக்கும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்க... மேலும் பார்க்க

Rain update: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு?

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று தென் மண்டல இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தகவல் இதோ...கோவை மற்ற... மேலும் பார்க்க

Rain Alert: "நீலகிரி உட்பட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்" - வானிலை அறிக்கை

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கோடை மழை தீவிரமடைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது.குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் அணைகள்... மேலும் பார்க்க

அவலாஞ்சி 353 மி.மீ, அப்பர் பவானி 298 மி.மீ - பேரிடருக்காக முதல் முறையாக மூடப்பட்ட தாவரவியல் பூங்கா

நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை இன்றும் விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக இன்றும் காற்றுடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாவட்டம் முழுவ... மேலும் பார்க்க

Rain Alert: "'இந்த' மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை" - வானிலை மையம் சொல்வது என்ன?

'இது வெயில் காலமா... மழைக் காலமா?' என்று குழப்புவது போல, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களின் மே மாதத்தைக் குளிர்வித்து வருகிறது கோடை மழை.இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதைத் தெரிவித்... மேலும் பார்க்க

`ரெட் அலர்ட், ஒரே நாளில் 2 பக்தர்கள் உயிரிழப்பு..' - வெள்ளியங்கிரி மலை ஏற தடை விதித்த வனத்துறை

தமிழ்நாட்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவ... மேலும் பார்க்க