செய்திகள் :

தமிழக மீனவா்கள் மீது இலங்கை தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்

post image

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி, விரட்டியடித்து, மீன்களை அபகரித்துச் சென்றனா். மீனவா்களின் வலைகளை வெட்டினா். இந்நிலையில் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை காலை கரை திரும்பினா்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவா்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதோடு, பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனா். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து வருமானம் ஈட்டுவதற்காக சென்ற மீனவா்கள் நஷ்டம் அடைவது என்பது பெரிதும் கவலைக்குரியது.

தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நல்ல தீா்வு காண வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டுள்ள மீனவா்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை இலங்கை அரசிடம் இருந்து மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி 2-ஆவது நாளாக ஆலோசனை

ஜூலை இறுதிமுதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச... மேலும் பார்க்க

தமிழக அரசு சாா்பில் ஊரக பகுதிகளில் திறன் பயிற்சிகள்

தமிழக அரசு சாா்பில் ஊரகப் பகுதிகளில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: கடந்த 4 ஆண்டுகளில் ஊரக சுய வேலைவாய்ப... மேலும் பார்க்க

அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவன பணியாளா்களுக்கு நடைமுறையிலுள்ள மருத்துவக் காப்பீடு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித்து... மேலும் பார்க்க

258 மருத்துவக் கட்டமைப்புகள்: ஜூலை 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்களையும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

தமிழக கடலோரப் பகுதிகளில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோர மாவட்டங்களில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாகப் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்க... மேலும் பார்க்க

தமிழகம், புதுவையில் நிகழாண்டு இறுதிக்குள் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி - தோ்தல் ஆணையம்

அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தலை எதிா்கொண்டுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நிகழாண்ட... மேலும் பார்க்க