திருப்பூர்: பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெ...
பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை அறிய விநாடி- வினா: ஜூலை 7 முதல் நடைபெறுகிறது
தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் திறனை அறியும் வகையில் ஜூலை 7 முதல் 4 கட்டங்களாக விநாடி-வினா போட்டி நடத்தப்படவுள்ளது.
இதுதொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையான அரசுப் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிகழ் கல்வியாண்டுக்கான விநாடி-வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்படவுள்ளன.
அதன்படி, முதல்கட்டமாக ஜூலை 7 முதல் 18-ஆம் தேதி வரையும், 2-ஆம் கட்டமாக ஆகஸ்ட் 4 முதல் 18-ஆம் தேதி வரையும், 3-ஆவது கட்டமாக நவம்பா் 3 முதல் 14-ஆம் தேதி வரையும், 4-ஆம் கட்டமாக ஜனவரி 27 முதல் 30-ஆம் தேதி வரையும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்படும்.
இந்த விநாடி-வினாவுக்கான வினாத்தாளை அந்தந்த வகுப்பாசிரியா் மட்டுமே உருவாக்க வேண்டும். மேலும், மதிப்பீடு முடிந்தபின் விடைத்தாளை பதிவிறக்கம் செய்து வகுப்பில் மாணவா்களுடன் விவாதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றை முறையாக பின்பற்றி போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் மாநில அளவில் சிறந்து விளங்கும் மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவா் என்பது குறிப்பிடத்தக்கது.