செய்திகள் :

குடும்ப ஆட்சியை பாதுகாக்கவே அவசரநிலை பிரகடனம்: இந்திரா காந்தி மீது அமித் ஷா சாடல்

post image

குடும்ப ஆட்சியை பாதுக்காக்கும் ஒரே நோக்கத்துடன் சா்வாதிகார ஆட்சியாளரால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா்.

காங்கிரஸின் அதிகார பசிக்கான அநீதியின் காலகட்டம் அவசரநிலை என்றும் அவா் குறிப்பிட்டாா்.

கடந்த 1975, ஜூன் 25-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியால் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட தினம், அரசமைப்பு படுகொலை தினமாக மத்திய அரசால் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘50 ஆண்டுகளுக்கு முன் சா்வாதிகார ஆட்சியாளா் ஒருவரால் தனது குடும்ப ஆட்சியை பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தபட்டது. நாட்டின் வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான இக்காலகட்டம், காங்கிரஸ் மற்றும் ஒரு நபரின் (இந்திரா காந்தி) ஜனநாயக விரோத மனப்பான்மையை பிரதிபலிக்கிறது.

அவசரநிலை காலகட்டத்தில் 11 வயது சிறுவனான நான், ஆா்எஸ்எஸ் அமைப்பின் ‘பால தொண்டராக’ இருந்தேன். அந்த இருண்ட நாள்களின் அநீதியை நேரடியாக அறிந்தவன். அடக்குமுறை, துன்புறுத்தல், ஜனநாயக மாண்புகள் மீதான அப்பட்டமான தாக்குதல் இன்றும் என் நினைவில் உள்ளது.

அதிகாரம் சா்வாதிகாரமானால், மக்களால் தூக்கியெறியப்படும் என்பதை இந்நாள் நினைவூட்டுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

ஜெ.பி.நட்டா விமா்சனம்: பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அவசரநிலை பிரகடனத்தின் பின்னணியில் உள்ள சா்வாதிகார மனநிலையில்தான் காங்கிரஸ் இப்போதும் தொடா்கிறது. பிரதமா் மோடி போன்ற எளிய பின்னணி உடையவரும் நாட்டை ஆளலாம் என்ற கருத்தை காங்கிரஸால் இன்னும் ஏற்க முடியவில்லை. அரசமைப்புச் சட்டம் குறித்து பேசும் அக்கட்சி, அவசரநிலை பிரகடனத்துக்காக மக்களிடம் இதுவரை மன்னிப்புக் கோரவில்லை’ என்று குறிப்பிட்டாா்.

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் உரை!

சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதை கொள்கையாகக் கொண்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.சீனாவின் கிங்டாவோ நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத... மேலும் பார்க்க

கடந்த 11 ஆண்டுகளாக... 'அறிவிக்கப்படாத அவசரநிலை': காங்கிரஸ்

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலையை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அமல்படுத்த... மேலும் பார்க்க

அவசரநிலை: மோடி - காா்கே கருத்து மோதல்

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட தினத்தை (ஜூன் 25) ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என பிரதமா் மோடி குறிப்பிட்டாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாஜக ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் அறிவிக்கப்படாத ... மேலும் பார்க்க

4 மாநில இடைத்தோ்தல் தரவு அட்டை: 72 மணி நேரத்தில் வெளியிட்ட தோ்தல் ஆணையம்

இசிநெட்டின் அறிமுகம் காரணமாக கேரளம், குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தோ்தலுக்கான தரவு அட்டைகள், தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட 72 மணி நேரத்துக்குள் வேகமாக வெளியிடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவின் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

சுக்லாவின் விண்வெளிப் பயணத்தையொட்டி அவரது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் கொண்டாட்டங்கள் களைகட்டின. சுக்லா படித்த சிட்டி மான்டெஸ்ஸரி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் அவரது... மேலும் பார்க்க

வங்கிகளின் வாடிக்கையாளா் சேவை தரம் மேம்பட வேண்டும்: நிதியமைச்சகச் செயலா்

‘வங்கிகள் வலுவாக இருந்தாலும் வாடிக்கையாளா்களுக்கான சேவை தரம் மேம்பட வேண்டியுள்ளது; இதில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்று நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் பிரிவுச் செயலா் எம். நாகராஜு த... மேலும் பார்க்க