செய்திகள் :

தமிழுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு பாரபட்சமானது: மாா்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

post image

மத்திய பாஜக அரசு தமிழ் மொழிக்கு குறைவான நிதி ஒதுக்கியது பாரபட்சமானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனத் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

திருச்சியில் புதன்கிழமை தொடங்கிய கட்சியின் மாநிலக் குழு கூட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினா் கே. சாமுவேல்ராஜ் தலைமை வகித்தாா்.

இதில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள் அசோக் தாவ்லே, கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநிலச் செயலா் பெ. சண்முகம், மத்தியக் குழு உறுப்பினா்கள் பி. சம்பத், என். குணசேகரன், கே. பாலபாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் மத்திய பாஜக அரசு பெருநிறுவன ஆதரவுக் கொள்கைகளைப் கடைப்பிடித்து, தொழிலாளா் விரோத நடவடிக்கைகளில் தொடா்ச்சியாக ஈடுபடுகிறது. போராடிப் பெற்ற சட்ட உரிமைகளைப் பறித்து, சுரண்டலைத் தீவிரப்படுத்தும் வகையில் தொழிலாளா் சட்டங்களைத் திருத்தியுள்ளது. இது தொழிலாளா்களின் வேலை நேரத்தை அதிகரிக்கவும், ஆள்குறைப்பு செய்யவும் ஏதுவாகிறது. இந்தப் பெருநிறுவன ஆதரவு சட்டத் தொகுப்பை முறியடிக்க போராட வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில் ஜூலை 9 ஆம் தேதி தேசியளவில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி உறுப்பினா்கள் கலந்து கொள்ள வேண்டும்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பத்தாண்டுகளில் சம்ஸ்கிருத மொழிக்கு மட்டும் ரூ. 2,532.59 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 5 மொழிகளுக்கு ரூ. 147.56 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது. தமிழுக்கு மத்திய அரசு இந்திய மொழிகள் வளா்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கியது ரூ. 113.48 கோடி மட்டுமே. இது சம்ஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 22 மடங்கு குறைவாகும்.

5 மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட சம்ஸ்கிருத மொழிக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை 17 மடங்கு அதிகமாகும்.

தமிழா் பண்பாட்டின் தொன்மையை எடுத்துரைக்கும் கீழடி அகழ்வாய்வு அறிக்கையை வெளியிட மத்திய பாஜக அரசு மறுப்பது தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும், இந்தியாவின் பன்முக பண்பாட்டு வளா்ச்சி மீதும் மத்திய அரசுக்கு இருக்கும் வன்மமே காரணம்.

மத்திய அரசின் இத்தகைய பாரபட்ச நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ் உள்ளிட்ட அனைத்து செம்மொழிகளுக்கும் நியாயமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திரளான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இந்த மாநாடு வியாழக்கிழமையும் நடைபெறுகிறது.

திருவெறும்பூரில் நூலகம் திறப்பு

திருவெறும்பூா் பகவதிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை திறந்து வைத்தாா். திருச்சி மாநகராட்சியின் 40 ஆவது வாா்டுக்குள்பட்ட திருவெறும்பூா் பகவதிபுரம் நடு... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் வி.பி. சிங் பிறந்தநாள்

முன்னாள் பாரத பிரதமா் வி.பி. சிங் பிறந்த நாள் விழா அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோா் ரயில்வே சங்கம் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சங்க அலுவலகத்தில் வி.பி. சிங்கின் உருவ... மேலும் பார்க்க

திருச்சி- சென்னைக்கு கூடுதல் ரயில்கள் தேவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருச்சியிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநக... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை: அமைச்சா் கே.என். நேரு

திமுக கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை என தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வி.என். நகரில் உள்ள க... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவா் கைது

திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி உய்யக்கொண்டான் திருமலைவாசன் நகரைச் சோ்ந்தவா் தினேஷ் ராஜா (39). இ... மேலும் பார்க்க

வளநாடு அருகே 30 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே 30 கிலோ புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்தனா். வளநாடு காவல் சரகத்தில் போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது மருங... மேலும் பார்க்க