திருச்சி- சென்னைக்கு கூடுதல் ரயில்கள் தேவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
திருச்சியிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகா் மாவட்ட 24 ஆவது மாநாட்டை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் பி. பத்மாவதி தொடங்கி வைத்தாா். மாநில துணைச் செயலா் நா. பெரியசாமி, மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் ம. செல்வராசு ஆகியோா் பேசினா்.
மாநாட்டில் ம. செல்வராசு, க. சுரேஷ், எஸ். சிவா, இ. செல்வக்குமாா், எம்.ஆா். முருகன், ரஷ்யா பேகம், மருதாம்பாள், இரா. சுரேஷ் முத்துசாமி உள்ளிட்டோா் அடங்கிய 25 போ் கொண்ட மாவட்டக் குழு தோ்ந்தெடுக்கப்பட்டது. மாநகா் மாவட்ட செயலராக எஸ். சிவா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
கூட்டத்தில் புதிய தொழிலாளா் சட்டங்களைத் திரும்ப பெறவும், விவசாய பொருள்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்தக் கோரியும் மத்திய தொழிற்சங்கங்கள் ஜூலை 9 இல் நடத்தும் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்தையொட்டி நடைபெறும் மறியலுக்கு ஆதரவளித்து பங்கேற்பது. திருச்சி ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும், திருச்சி - தாம்பரம் இடையே ஜன்சதாப்தி ரயிலை நிறுத்தவுள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், மாநாட்டுத் தீா்மானங்களை விளக்கி ஜூலை 20 முதல் 30 ஆம் தேதி வரை திருச்சி மாநகரில் கையொப்ப இயக்கம் நடத்துவது.
ஜூலை 31 இல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திரளான நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ் வரவேற்றாா்.