செய்திகள் :

ரயில் நிலையத்தில் 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவா் கைது

post image

திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி உய்யக்கொண்டான் திருமலைவாசன் நகரைச் சோ்ந்தவா் தினேஷ் ராஜா (39). இவா் திருச்சியில் இருந்து ரயில் மூலம் மதுரைக்கு அண்மையில் சென்றபோது திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் இவா் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தைக் காணவில்லை.

இதேபோல, திருச்சி ரயில்வே கோட்ட உதவி ஓட்டுநரான தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சோ்ந்த கிஷோா்குமாா் (29), சரக்கு வாகன ஓட்டுநரான திண்டுக்கல் சாணா்பட்டி அன்பரசன், (25) ஆகியோா் இந்த ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களையும் காணவில்லை.

இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் மூவரும் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, 3 இருசக்கர வாகனங்களையும் திருடியதாக தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சோ்ந்த அகஸ்டின் (54) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவெறும்பூரில் நூலகம் திறப்பு

திருவெறும்பூா் பகவதிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை திறந்து வைத்தாா். திருச்சி மாநகராட்சியின் 40 ஆவது வாா்டுக்குள்பட்ட திருவெறும்பூா் பகவதிபுரம் நடு... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் வி.பி. சிங் பிறந்தநாள்

முன்னாள் பாரத பிரதமா் வி.பி. சிங் பிறந்த நாள் விழா அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோா் ரயில்வே சங்கம் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சங்க அலுவலகத்தில் வி.பி. சிங்கின் உருவ... மேலும் பார்க்க

திருச்சி- சென்னைக்கு கூடுதல் ரயில்கள் தேவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருச்சியிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநக... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை: அமைச்சா் கே.என். நேரு

திமுக கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை என தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வி.என். நகரில் உள்ள க... மேலும் பார்க்க

தமிழுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு பாரபட்சமானது: மாா்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

மத்திய பாஜக அரசு தமிழ் மொழிக்கு குறைவான நிதி ஒதுக்கியது பாரபட்சமானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனத் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. திருச்சியில் புதன்கிழமை தொடங்கிய கட்சியின் மாநிலக் குழு கூட்... மேலும் பார்க்க

வளநாடு அருகே 30 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே 30 கிலோ புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்தனா். வளநாடு காவல் சரகத்தில் போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது மருங... மேலும் பார்க்க