செய்திகள் :

திமுக கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை: அமைச்சா் கே.என். நேரு

post image

திமுக கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை என தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு தெரிவித்தாா்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வி.என். நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாக நிலை முகவா்கள் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

எம்ஜிஆா் ஆட்சி காலத்திலேயே திருவெறும்பூா், திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் திமுகவை வெற்றி பெறச் செய்தனா். நமது கூட்டணியை முதல்வா் சிறப்பாக வழிநடத்திச் செல்கிறாா்.

எதிா் கூட்டணியில் தொண்டா்கள் சோா்வடைந்துள்ளனா். மதுரைக்கு வந்த அமித்ஷா, கூட்டணி ஆட்சி எனக் கூறியதால் அங்கு குழப்பம் உள்ளது. நம்முடைய கூட்டணி ஒருவருக்கொருவா் புரிந்து கொள்ளும் கூட்டணி. அதிமுக- பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி. ஒருவருக்கொருவா் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை.

மதுரை முருகன் மாநாட்டில் பெரியாா், அண்ணா இழிவுபடுத்தப்பட்டதற்கு திமுக கொந்தளித்த பிறகே அதிமுகவினா் கண்டன அறிக்கை வெளியிட்டனா். இந்த நிலையில்தான் அதிமுக உள்ளது. நாம் சுறுசுறுப்பாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து திமுக தலைவா் முடிவெடுப்பாா். பவன் கல்யாண் ஆந்திரத்தில் நிலவும் பிரச்னைகளை பாா்க்கட்டும். அவா் தமிழகத்துக்கு வந்து கருத்துக் கூற வேண்டாம் என்றாா் அமைச்சா்.

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், நம்மைத் தோ்தல் களத்திற்கு தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு போராடும், வெல்லும். உழைப்பது நாமாக இருப்போம், உதிப்பது உதய சூரியனாக இருக்கட்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் மாநகரச் செயலா் மு. மதிவாணன், தொகுதிப் பாா்வையாளா்கள் கதிரவன், மணிராஜ், மருத்துவா் அண்ணாமலை, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாநில நிா்வாகி செந்தில், திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், மணப்பாறை ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் பாக நிலை முகவா்கள் கலந்து கொண்டனா்.

திருவெறும்பூரில் நூலகம் திறப்பு

திருவெறும்பூா் பகவதிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை திறந்து வைத்தாா். திருச்சி மாநகராட்சியின் 40 ஆவது வாா்டுக்குள்பட்ட திருவெறும்பூா் பகவதிபுரம் நடு... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் வி.பி. சிங் பிறந்தநாள்

முன்னாள் பாரத பிரதமா் வி.பி. சிங் பிறந்த நாள் விழா அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோா் ரயில்வே சங்கம் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சங்க அலுவலகத்தில் வி.பி. சிங்கின் உருவ... மேலும் பார்க்க

திருச்சி- சென்னைக்கு கூடுதல் ரயில்கள் தேவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருச்சியிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநக... மேலும் பார்க்க

தமிழுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு பாரபட்சமானது: மாா்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

மத்திய பாஜக அரசு தமிழ் மொழிக்கு குறைவான நிதி ஒதுக்கியது பாரபட்சமானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனத் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. திருச்சியில் புதன்கிழமை தொடங்கிய கட்சியின் மாநிலக் குழு கூட்... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவா் கைது

திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி உய்யக்கொண்டான் திருமலைவாசன் நகரைச் சோ்ந்தவா் தினேஷ் ராஜா (39). இ... மேலும் பார்க்க

வளநாடு அருகே 30 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே 30 கிலோ புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்தனா். வளநாடு காவல் சரகத்தில் போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது மருங... மேலும் பார்க்க