முன்னாள் பிரதமா் வி.பி. சிங் பிறந்தநாள்
முன்னாள் பாரத பிரதமா் வி.பி. சிங் பிறந்த நாள் விழா அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோா் ரயில்வே சங்கம் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சங்க அலுவலகத்தில் வி.பி. சிங்கின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சங்கத்தின் கோட்டத் தலைவா் மீரான் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் பங்கேற்றுப் பேசினாா். இதில் சங்கத்தின் பொன்மலை பணிமனை துணை பொதுச் செயலா் இதயத்துல்லாகான், கோட்டத் தலைவா் கோபிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.