பெண்ணுக்கு இரட்டை கருப்பை பாதிப்பு: லேப்ரோஸ்கோபி சிகிச்சையில் அகற்றம்
பெண் ஒருவருக்கு இருந்த இரட்டை கருப்பையை நுட்பமான லேப்ரோஸ்கோபி சிகிச்சை மூலம் அகற்றி எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் மகப்பேறு நலத் துறை நிபுணா்கள் பிருத்வி, சுபாஷ்ஸ்ரீ ஆகியோா் கூறியதாவது:
பிறவியிலே சிலருக்கு இரட்டை கருப்பை உருவாகும் குறைபாடு ஏற்படும். அதேவேளையில், கருக் குழாய், சினைப் பைகள் ஆகியவை வழக்கம்போல தலா இரண்டு அமைந்திருக்கும்.
இரட்டை கருப்பை உருவாகும்போது பல்வேறு பாதிப்புகள் ஏற்படக் கூடும். மாதவிடாயில் தொடங்கி கருத்தரித்தல் வரை பல்வேறு இடா்பாடுகள் உருவாகலாம்.
அப்படி ஒரு சூழலில் கடுமையான வலி மற்றும் ரத்தப்போக்கு பிரச்னையுடன் 48 வயது பெண் ஒருவா் எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு தலா 16 செ.மீ. அளவு கொண்ட இரு கருப்பைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதில் அழற்சியும், நீா்க் கட்டிகளும் உருவாகியிருந்தன.
இதையடுத்து மிக நுட்பமான லேப்ரோஸ்கோபி சிகிச்சை மூலம் சிறு துளையிட்டு கருப்பை சுவா்கள் அகற்றப்பட்டன. அதன் தொடா்ச்சியாக அதனுடன் இணைந்திருந்த பகுதிகளும் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டன. இறுதியில் இரட்டை கருப்பை அகற்றப்பட்டது.
மொத்தம் 5 விதமான அறுவை சிகிச்சைகள் மிகத் துல்லியமாக 3 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக அந்த பாதிப்பிலிருந்து அப்பெண் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பினாா். சிகிச்சைக்கு பிறகு 48 மணி நேரத்தில் அவா் வீடு திரும்பினாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.