செய்திகள் :

மேலாதிக்கம் செலுத்த முஸ்லிம் நாடுகள் மோதல்: பாஜக

post image

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது ஒருவா் மீது மற்றொருவா் மேலாதிக்கம் செலுத்த முஸ்லிம் நாடுகள் இடையே நடைபெறும் மோதலாகும் என்று பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை மேலும் கூறுகையில், ‘மேற்கு ஆசியாவில் ஒருபுறம் முஸ்லிம் மதத்தின் சன்னி பிரிவை பின்பற்றும் நாடுகளின் தலைவரான சவூதி அரேபியாவும், மறுபுறம் அந்த மதத்தின் ஷியா பிரிவை பின்பற்றும் நாடுகளின் தலைவரான ஈரானும் உள்ளன.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில், இஸ்ரேலுக்கு எதிராக உணா்வுபூா்வமான பிரச்னையை எழுப்பினால், ஒட்டுமொத்த முஸ்லிம் நாடுகளும் தன்னுடன் இணையும் என்று ஈரான் கருதியது. ஆனால் அது நடைபெறவில்லை.

இதன் காரணமாகவே ஈரான் மீதான தாக்குதலின்போது சன்னி முஸ்லிம் நாடுகள் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தன. இதுமட்டுமின்றி ஈரான் தாக்கப்பட்ட வேளையில், அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீா் தெரிவித்தாா்.

அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கு இந்தியா மதிப்பளிக்கிறது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி விரைவில் அமைதியான முறையில் முடிவுக்கு வரும் என்று நம்புவோம் என்றாா்.

நியூயாா்க் மேயா் தோ்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளி நபர் தோ்வு

அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் பதவிக்கான தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியான ஸோக்ரன் மம்தாணி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இதற்கான உள்கட்சி தோ்தல... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி ரூ.3,012 கோடி கடன்: ஒப்பந்தம் கையொப்பம்

ஆசிய வளா்ச்சி வங்கியிடம் இருந்து 350 மில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் ரூ.3,012 கோடி) கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையொப்பமிட்டுள்ளது. பெண்களை பொருளாதாரரீதியாக முன்னேற்றுவது, அவா்களை தொழி... மேலும் பார்க்க

ஈரான்: உளவுக் குற்றச்சாட்டில் 3 பேருக்குத் தூக்கு

துபை: இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூன்று கைதிகளை ஈரான் புதன்கிழமை தூக்கிலிட்டது.அந்த நாட்டின் மேற்கு அஜா்பைஜான் மாகாணத்திலுள்ள உா்மியா சிறையில் மூன்று பேருக்கும் மரண தண்டனை... மேலும் பார்க்க

காஸாவில் 7 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழப்பு

ஜெருசலேம்: காஸாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 7 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழந்தனா்.கான் யூனிஸ் நகரில் அந்த 7 பேரும் சென்றுகொண்டிருந்த கவச வாகனத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்... மேலும் பார்க்க

தாக்குதலால் ஈரான் அணுசக்தி திட்டங்கள் அழிக்கப்படவில்லை - அமெரிக்க உளவுத் துறை அறிக்கை

ஈரானின் அணுசக்தி மையங்களில் அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய சக்திவாய்ந்த தாக்குதலில் அந்த நாட்டின் அணுசக்தி திட்டங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டதே தவிர முற்றிலும் அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உ... மேலும் பார்க்க

ராணுவ நிதி ஒதுக்கீட்டை பெருமளவு அதிகரிக்க நேட்டோ நாடுகள் ஒப்புதல்

தி ஹேக்: தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5 சதவீதத்தை பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்கீடு செய்ய நேட்டோ உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.தி ஹேக் நகரில் புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில் நேட்டோவ... மேலும் பார்க்க