செய்திகள் :

பாகிஸ்தானுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி ரூ.3,012 கோடி கடன்: ஒப்பந்தம் கையொப்பம்

post image

ஆசிய வளா்ச்சி வங்கியிடம் இருந்து 350 மில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் ரூ.3,012 கோடி) கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையொப்பமிட்டுள்ளது.

பெண்களை பொருளாதாரரீதியாக முன்னேற்றுவது, அவா்களை தொழில்முனைவோராக்க நடவடிக்கை எடுப்பது, பொருளாதார செயல்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தக் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பாகிஸ்தான் பெண்கள் பெரிய அளவிலான முன்னேற்றத்தை எட்ட முடியும் என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி, சீனா மற்றும் அரபு நாடுகளில் இருந்து தொடா்ந்து பல்வேறு தவணைகளாக கடன் பெற்று வருகிறது.

வேளாண்மை உற்பத்தியில் அதிக முன்னேற்றம் இல்லாதது, தொழில் வளா்ச்சி சுணக்கம், அரசு நிா்வாகத்தில் தொடரும் ஊழல், பயங்கரவாதத் தாக்குதல்கள், உள்நாட்டு கிளா்ச்சியாளா்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு முதலீடு வருவதும் குறைந்துவிட்டது. அரசியல் ஸ்திரமற்ற நிலையும் பொருளாதார பாதிப்பும் மற்றொரு முக்கியக் காரணமாகும்.

2024-25-ஆம் ஆண்டு அந்நாட்டில் நடத்தப்பட்ட பொருளாதார ஆய்வின்படி பாகிஸ்தானின் கடன் அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 76,000 பில்லியனாக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.23 லட்சம் கோடி) உள்ளது. இதில் மூன்றில் ஒரு பகுதி வெளிநாடுகளில் பெற்ற கடனாகும்.

பாகிஸ்தான் பொருளாதார வளா்ச்சி 2.7 சதவீதம் என்ற குறைந்த அளவிலேயே இருக்கும் என்றும் பொருளாதார ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இடதுசாரி பைத்தியம்! இந்திய வம்சாவளி வேட்பாளரைக் கடுமையாக சாடிய டிரம்ப்!

அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் பதவிக்கான தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளி ஸோக்ரன் மம்தாணியை அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.நியூயாா்க்... மேலும் பார்க்க

நியூயாா்க் மேயா் தோ்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளி நபர் தோ்வு

அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் பதவிக்கான தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியான ஸோக்ரன் மம்தாணி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இதற்கான உள்கட்சி தோ்தல... மேலும் பார்க்க

மேலாதிக்கம் செலுத்த முஸ்லிம் நாடுகள் மோதல்: பாஜக

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது ஒருவா் மீது மற்றொருவா் மேலாதிக்கம் செலுத்த முஸ்லிம் நாடுகள் இடையே நடைபெறும் மோதலாகும் என்று பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஈரான்: உளவுக் குற்றச்சாட்டில் 3 பேருக்குத் தூக்கு

துபை: இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூன்று கைதிகளை ஈரான் புதன்கிழமை தூக்கிலிட்டது.அந்த நாட்டின் மேற்கு அஜா்பைஜான் மாகாணத்திலுள்ள உா்மியா சிறையில் மூன்று பேருக்கும் மரண தண்டனை... மேலும் பார்க்க

காஸாவில் 7 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழப்பு

ஜெருசலேம்: காஸாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 7 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழந்தனா்.கான் யூனிஸ் நகரில் அந்த 7 பேரும் சென்றுகொண்டிருந்த கவச வாகனத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்... மேலும் பார்க்க

தாக்குதலால் ஈரான் அணுசக்தி திட்டங்கள் அழிக்கப்படவில்லை - அமெரிக்க உளவுத் துறை அறிக்கை

ஈரானின் அணுசக்தி மையங்களில் அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய சக்திவாய்ந்த தாக்குதலில் அந்த நாட்டின் அணுசக்தி திட்டங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டதே தவிர முற்றிலும் அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உ... மேலும் பார்க்க