பள்ளப்பட்டி அருகே சாலை அமைக்கும் பணி ஆய்வு
அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பள்ளப்பட்டி அருகே உள்ள அண்ணாநகா் பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கரூா் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்குள்பட்ட மாநில நெடுஞ்சாலையான தாடிக்கொம்பில் இருந்து பள்ளபட்டி வழியாக அரவக்குறிச்சி வரை உள்ள சாலை அகலப்படுத்தும் பணி நிறைவடைந்தது. இந்நிலையில், தற்போது தாா்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை புதன்கிழமை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி நேரில் ஆய்வு செய்தாா். அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளா் வினோத்குமாா் உடன் இருந்தாா்.